Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கட்டை கூத்து கலைஞனாக சிநேகன் நடிக்கும் பொம்மி வீரன் - மண் மணம் மாறாத கதை
சென்னை: கவிஞர் சிநேகன் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருக்கும் பொம்மி வீரன் திரைப்படம் ஒரு கட்டைக்கூத்து கலைஞனின் வாழ்வை, அதன் பல்வேறு பரிமாணங்களை, மண்ணின் மணமும், குணமும், இயல்புகளும் மாறாமல், விவரிக்கும் ஒரு உணர்வு பூர்வமானத் திரைப்படம்.
கவிஞர் சிநேகன் இதற்கு முன்பு உயர்திரு 420 உள்பட சில படங்களில் நடித்திருந்தாலும், ஒன்று கூட சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இருந்தாலும், தமிழ் சினிமாவில் தானும் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற கலை தாகம் மட்டும் அடங்கவில்லை. இதனால் தனது முயற்சியை இன்னும் தொடர்ந்து மேற்கோண்டு வருகிறார்.
அந்த வகையில் கவிஞர் சிநேகன் நடித்திருக்கும் படம் தான் பொம்மி வீரன். உழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் பொம்மி வீரன் படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்குகிறார்.
உழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், தமிழகத்தின் பழம்பெரும் கலைகளான தெருக்கூத்து, பாவைக்கூத்து போல வெகுவேகமாக அழிந்து வரும் கலையான கட்டைக்கூத்தை மையமாக கொண்டது.
ஒரு கட்டைக்கூத்து கலைஞனின் வாழ்வை, அதன் பல்வேறு பரிமாணங்களை, மண்ணின் மணமும், குணமும், இயல்புகளும் மாறாமல், விவரிக்கும் ஒரு உணர்வு பூர்வமானத் திரைப்படம்.
இப்படத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருக்கும் கவிஞர் சிநேகன், அதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக நடித்திருக்கும் நாட்டியா, இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.
மேலும் இயக்குனர் கே.பாக்யராஜ் ,ஊர்வசி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், முத்துக்காளை, சந்தான பாரதி, போண்டாமணி, இ.ராமதாஸ், டி.பி.கஜேந்திரன், தாரை தப்பட்டை ஆனந்தி, கனிகா மற்றும் பலர் உள்ளிட்ட பல சிறப்பான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் முதன்முறையாக மோகன்லால் உடன் ஜோடி சேரும் த்ரிஷா
சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் சுதர்சன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார். தாஜ்நூர் இசையமைக்க, கவிஞர் சிநேகன் பாடல்களையும் எழுதி இருக்கிறார். நிகில் முருகன் மக்கள் தொடர்பை கவனித்துக்கொள்கிறார்.
கலை இயக்குனர் மார்டின் டைட்டஸ் காட்சிகளுக்கு அழகு சேர்க்க, விஜய் ஜாக்குவார் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார். அறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்கத்தில், கவிஞர் சினேகன் தயாரித்து நடித்திருக்கும் பொம்மிவீரன், வெகுவிரைவில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!