Don't Miss!
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வைரமுத்துவின் திருமண மண்டபத்திற்கு சீலா… உண்மையில் நடந்தது என்ன?
சென்னை : கவிபேரரசுவின் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
சென்னை மாநகராட்சிக்கு கொரோனா காலத்தில் செலுத்தாத சொத்து வரியை வைரமுத்து செலுத்தியுள்ளார். 8 லட்ச ரூபாய் அளவிற்கு அவர் சொத்துவரி செலுத்தியதால் அதிகாரிகள் சீல் வைக்கும் முடிவை கைவிட்டுள்ளனர்.
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு சொந்தமான திருமண மண்டபம் பொன்மணி மாளிகை இயங்கி வருகிறது. அது 27 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த நான்கு வருடங்களாக நோட்டீஸ் கொடுத்தும் மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரியை செலுத்தாமல் காலம் தாழ்த்தியதால் நேற்று காலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திருமண மண்டபத்திற்க்கு சீல் வைக்க வந்துவிட்டதாக இணையத்தில் செய்திகள் பரவின.
ஆனால், கொரோனா காலத்தில் கட்டாத வரியை தான் அதிகாரிகள் வசூலிக்க வந்தார்கள் என்றும். இதையடுத்து வைரமுத்து செலுத்த வேண்டிய 7 லட்சத்து 93 ஆயிரத்து 241 ரூபாய் சொத்து வரியை மண்டப மேலாளர் மூலம் வங்கி வரைவோலையாக மாநகராட்சிக்கு உடனடியாக செலுத்தினார். இதனால், வைரமுத்துவின் திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைக்கும் முடிவைக் கைவிட்டனர். வைரமுத்துவின் திருமண மண்டபத்திற்கு சீல் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவியது. ஆனால், உண்மை தெரிந்ததும் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.