படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள்: ட்ரோல் செய்பவர்களுக்கு விவேக் பதில்
சென்னை: விமர்சனத்திற்கு நான் பயந்தவன் இல்லை என பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வைரலானது. சிம்டாங்காரன் என்ற வார்த்தைக்கு கண் சிமிட்டாமல் பார்க்குமளவிற்கு கவர்ந்திழுப்பவன் என விவேக் விளக்கமளித்தாலும், பாடலின் முழு அர்த்தமும் தெரியாமல் பலர் குழம்பியுள்ளனர்.

கானா, வெஸ்டர்ன், மெலடி என பல விஷயங்கள் பாடலில் இருப்பதால் அதிகமாக விமர்சிக்கவும் படுகிறது. இந்த நிலையில் விமர்சனத்திற்கு நான் பயந்தவன் இல்லை என பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.
"நான் எப்போதுமே கிண்டல் செய்வார்கள் என கூச்சப்பட்டு ஒதுங்கியது கிடையாது. நீங்கள் சொல்ல வருவதை உங்களுடைய இடத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் படத்தில் இந்த பாடல் இடம்பெறும் காட்சியைப் பார்த்த பிறகும், பாடல் வரிகளில் மாற்றம் தேவை என நினைத்தால் அதை நான் ஏற்றுக்கொண்டு வரும்காலங்களில் அதற்கேற்றாற்போல் பணியாற்றுகிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு கமெண்ட் செய்துவரும் ரசிகர்கள், படத்திற்கு மிக பொருத்தமாக பாடல் இருந்ததனால் தான் ஏஆர்.ரஹ்மானும் முருகதாஸும் இதை அனுமதித்துள்ளனர் என குறிப்பிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications