Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஆனந்த விகடனை புல்லுருவி என திட்டிய விவேகா... செய்தியாளர்கள் எதிர்ப்பு!
பிரபல வார இதழான ஆனந்த விகடனை புல்லுருவி என பாடலாசிரியர் விவேகா திட்டியதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர் பத்திரிகையாளர்கள். இதைத் தொடர்ந்து அந்த வார்த்தையை வாபஸ் பெறுவதாக அவர் தெரிவித்தார்.
குற்றம் 23 படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினர் அருண் விஜய், இயக்குநர் அறிவழகன் உள்ளிட்ட படக் குழுவினர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அறிவழகன், நல்ல கருத்தை வலியுறுத்திய தன் படத்துக்கு குறைந்த மதிப்பெண் போட்ட விகடன் குழு, அப்படி எந்தக் கருத்தும் இல்லாத மாநகரம் படத்தின் மேக்கிங்கை வைத்து 50 மதிப்பெண் தந்துள்ளது வருத்தமாக உள்ளதாகக் கூறினார்.
உடனே குறுக்கிட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் கவிஞர் விவேகா... விடுங்க அறிவழகன்.. சில புல்லுருவிகள் அப்படித்தான். நல்ல விமர்சனம் தந்த மற்றவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் என்றார்.
இது அங்கு வந்திருந்த செய்தியாளர்கள் பலர், விவேகாவின் அந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒரு பத்திரிகையை புல்லுருவி என்று சொல்வதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூற, உடனே விவேகா, 'நான் தனிப்பட்ட முறையில் அவர்களால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் அப்படிச் சொன்னேன். வேண்டுமானால் அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்," என்றார்.
மேலும் குற்றம் 23 படத்துக்கான விமர்சனம் குறித்து விகடன் விமர்சனக் குழுவுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன் என்றும் விவேகா கூறினார்.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!