Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'ஆபாச போட்டோவை அனுப்பினார்..' ஒப்பனை கலைஞர் அதிர்ச்சி.. மகன் மீது புகார் கொடுத்த அம்மா நடிகை!
கொச்சி: ஒப்பனை கலைஞருக்கு ஆபாச போட்டோவை அனுப்பியதாக, தனது மகன் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் பிரபல அம்மா நடிகை.
Recommended Video
பிரபல மலையாள நடிகை மாலா பார்வதி. இவர் தமிழில், விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தில் கீர்த்தி சுரேஷ் அம்மாவாக நடித்துள்ளார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர், எம்.ஏ.நிஷாத் இயக்கிய கேணி, அஸ்வின் சரணவன் இயக்கிய கேம் ஓவர் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.
சவால் விட்ட இயக்குநர்.. சாதித்து காட்டிய கமல்.. ஒரே வாரத்தில் ரெடியான தேவர் மகன் ஸ்க்ரிப்ட்!
ஒப்பனை கலைஞர்
மலையாள டிவி. சீரியல்கள் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்துள்ள மாலா பார்வதி, சைக்காலஜிஸ்டும் கூட. இவரது மகன் அனந்த கிருஷ்ணன். கேரள மாநில திருநங்கை ஒப்பனை கலைஞர் சீமா வினித், கடந்த சில நாட்களுக்கு முன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகார் கூறியிருந்தார். அதில், பிரபல மலையாள நடிகையின் மகன் தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாகக் கூறியிருந்தார்.
மன்னிப்புக் கேட்டார்
'கடந்த 2017ம் ஆண்டில் இருந்தே ஆபாசமான செய்திகளையும் அனுப்பி வருகிறார். அண்மையில்தான் அதை பார்த்தேன். பின்னர் என் பேஸ்புக் பதிவைக் கண்டு, மகன் செய்த செயலுக்கு அந்த நடிகை போன் செய்து மன்னிப்புக் கேட்டார். அவனை திருத்த முயற்சி செய்கிறேன். சட்டப்படி நடவடிக்கை முயன்றால் ஆதரவு அளிக்கிறேன் என்று சொன்னார்.
விரும்பவில்லை
அவருக்கு இதுபோன்று நேர்ந்திருந்தால் இப்படி சமாதானப்படுத்த முயல்வாரா? அந்த நடிகையின் பெயரை சொல்ல விரும்பவில்லை' என்று கூறியிருந்தார் சீமா வினித். இது பரபரப்பானது. பின்னர் அடுத்த சில மணி நேரங்களில், அந்த நடிகை மாலா பார்வதி என்றும், தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியது அவர் மகன் அனந்த கிருஷ்ணன் என்றும் கூறினார்.
நீதி வேண்டும்
இதுபற்றி நடிகை மாலா பார்வதியும் பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டார். அதில், இந்த விஷயத்தில் நஷ்ட ஈடு கொடுத்தால், சீமா விவகாரம் முடிந்துவிடும் என்று அவர் தரப்பில் கேட்கப் பட்டதாகக் கூறியிருந்தார். இது பரபரப்பானது. பின்னர், தான் நஷ்ட ஈடு கேட்கவில்லை என்றும் அப்படி கேட்டிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் காட்டட்டும், எனக்கு நீதி வேண்டும் என்றும் சீமா கேட்டிருந்தார்.
உண்மை வெளியே
இந்நிலையில், மாலா பார்வதி கூறியதாவது: என் மகனும் அவரும் சம்மதித்துதான் பேசியிருக்கிறார்கள். உண்மை வெளியே வர வேண்டும் என்பதால் போலீசில் புகார் அளித்திருக்கிறேன். மகனது செல்போனையும் ஒப்படைத்துள்ளேன். என் மகன் அனுப்பிய மெசேஜுக்கு தம்ஸ் அப் எமோஜியை சீமா கொடுத்துள்ளார். அந்த போட்டோ இருக்கிறது.
மகனை ஆதரிக்கவில்லை
நான் சீமாவை காயப்படுத்த விரும்பவில்லை. அவருக்கு ஆதரவாக இருப்பதால்தான் அதை பேஸ்புக்கில் பதிவு செய்யவில்லை. நான், என் மகனை ஆதரிக்கவும் இல்லை. அவன் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!