Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கீதாஞ்சலி செல்வராகவனின் 'மாலை நேரத்து மயக்கம்' ரசிகர்களை மயக்கியதா?
சென்னை: செல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியிருக்கும் மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது.
பாலகிருஷ்ண கோலா, வாமிகா ஆகிய புதுமுகங்களின் நடிப்பில் வெளியான மாலை நேரத்து மயக்கம் பெரும்பாலான ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மாலை நேரத்து மயக்கம் ரசிகர்களை மயக்கியதா? என்பதை பார்க்கலாம்.
|
வயது முதிர்ந்தவர்களுடன்
"ஒரு துணிச்சலான திரைக்கதை, இயக்கியிருக்கும் விதம் பார்க்க வேண்டும் என்ற தீவிரத்தை உண்டு பண்ணுகிறது. திரையரங்குகளில் இந்தப் படத்தை வயது முதிர்ந்தவர்களுடன் மட்டும் பாருங்கள்" என்று கூறுகிறார் பர்வேஸ் ஆஸ்மி.
|
பொருத்தமான கதை
"மாலை நேரத்து மயக்கம் பிடித்திருக்கிறது. கீதாஞ்சலி செல்வா ஒரு பொருத்தமான விஷயத்தை கையாண்டிருக்கிறார். வழக்கமான செல்வராகவன் படம் தான்" என்று ராஜசேகர் கூறியிருக்கிறார்.
|
முதல் பாதி
மாலை நேரத்து மயக்கம் முதல் பாதி நன்றாக இருக்கிறது. பாலகிருஷ்ணா, வாமிகா நன்றாக நடித்திருக்கின்றனர். மிகவும் தீவிரமான கதை நம்மைத் திசை திருப்பும் எந்த விசயங்களும் படத்தில் இல்லை" ரமேஷின் பதிவிது.
|
நன்றாக இருக்கிறது
"மாலை நேரத்து மயக்கம் நன்றாக உருவாக்கி இருக்கின்றனர். அதிகம் நடக்கக் கூடிய ஒரு கதைதான்.மனதுக்குப் பிடித்த இசையுடன் படத்தின் கதையை அழகான எடுத்துரைக்கிறார் கீதாஞ்சலி. கதாநாயகி வாமிகா அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்" என்று பாராட்டியிருக்கிறார் தினேஷ்.
இதைப் போன்று பெரும்பாலான ரசிகர்களும் படம் நன்றாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.