Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாலை நேரத்து மயக்கம்.. என்னை மயக்கியது - செல்வராகவன்
சென்னை: தனது மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாலை நேரத்து மயக்கம் படத்தை ஒவ்வொருவரும் தமது ஜோடியுடன் கண்டுகளிக்க வேண்டும் என்று இயக்குநர் செல்வராகவன் கூறியிருக்கிறார்.
இயக்குநர் செல்வராகவன் திரைக்கதை எழுத, அவரது மனைவி கீதாஞ்சலி மாலை நேரத்து மயக்கம் படத்தை இயக்கியிருக்கிறார். 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன் ‘என்ன சொல்வது என்று தெரியவில்லை. தற்போது தான் என்னுடைய மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்' படத்தை பார்த்தேன், மெய்மறந்து போனேன். ஒவ்வொரு ஜோடியும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்' என்று படத்தைப் பாராட்டியிருக்கிறார்.
இப்படம் இடையில் சில பிரச்சினைகளை சந்தித்த போதும் கூட சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதனால் உற்சாகத்தில் இருக்கும் கீதாஞ்சலி செல்வராகவன் விரைவில் இப்படத்தை முடித்து திரைக்கு கொண்டுவருவதில் தற்போது மும்முரமாக இருக்கிறார்.
மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நாயகனாக பாலகிருஷ்ணன் மற்றும் நாயகியாக வாமிகா என்ற புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் அம்ரித் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
காதலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் மாலை நேரத்து மயக்கம், இளைய தலைமுறையினர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.