Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
‘மாலை நேரத்து மயக்கம்’... கனவு நினைவானதாக கீதாஞ்சலி செல்வராகவன் மகிழ்ச்சி
சென்னை: மாலை நேரத்து மயக்கம் படம் மூலம் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்றியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் செல்வராகவன். நடிகர் தனுஷின் அண்ணனான இவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன்.
இவர் தற்போது மாலை நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் புத்தாண்டு அன்று ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், இயக்குனர் செல்வராகவன், இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன், இசையமைப்பாளர் அம்ரித், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், தயாரிப்பாளர் கோலா பாஸ்கர், படத்தின் நாயகன் பாலகிருஷ்ண கோலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கீதாஞ்சலி செல்வராகவன், "நானும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் ஒன்றாக வேலை செய்தோம், அப்போதே நாங்கள் இருவரும் ஒன்றாக இனைந்து வேலை செய்யவேண்டும் என்று முடிவு செய்து இருந்தோம். அந்த கனவு இப்போது நினைவாகி உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.