Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நள்ளிரவில் போன் செய்து பாராட்டிய ரஜினி.. யாருகிட்ட போய் சொல்வேன்.. நெகிழ்ந்துபோன சீனு ராமசாமி!
சென்னை : மாமனிதன் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நள்ளிரவில் போன் செய்து பாட்டினார். இந்த விஷயத்தை யாருகிட்ட போய் சொல்வது என்று தெரியாமல் தவித்தேன் என்று சீனு ராமசாமி நெகிழ்ந்து பேசினார்.
“கே.ஜி.எஃப் சேப்டர் 3“… முக்கிய தகவலை சொன்ன படக்குழு… குஷியில் ரசிகர்கள் !
சீனு ராமசாமி
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதியுடன் 4வது முறையாக இணைந்த படம் மாமனிதன்.
இந்த படத்தில் காயத்ரி, குரு சோமசுந்தரம், சாஜி சென், ஜூவல் மேரி, அனிகா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர்
மாமனிதன்
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுவை மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் முதன் முறையாக இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
பாராட்டிய ரஜினி
இசைவெளியீட்டு விழாவில் பேசிய சீனு ராமசாமி, நள்ளிரவு 3 மணி அளவில் எனக்கு ஒரு போன் வந்தது. மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் நிறைந்து பாராட்டினார். விஜய்சேதுபதி,காயத்ரி நடிப்பு என ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு சொல்லி பாராட்டினார். நான் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன் ரொம்ப தெம்பா இருக்கு சார், நன்றி என்றேன்.
யார் கிட்ட சொல்லுவேன்
இதையார் கிட்ட சொல்வது என்றே தெரியல, தூங்கிட்டு இருந்த மனைவியை எழுப்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாமனிதன் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார் என்று கூறி செல்போனை காண்பித்தேன் என்றார். தொடர்ந்து பேசிய சீனுராமசாமி, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்தப் படம் குழந்தை போல. யுவன், விஜய் சேதுபதி இல்லாமல் இந்தப் படம் நடந்திருக்காது. முழு ஈடுபாட்டுடன் இப்படத்தை தொடங்கினேன். இளையராஜாவுக்கு அர்ப்பணிக்கும் விதமாக இப்படம் இளையராஜா பிறந்த ஊரான பண்ணையபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.