Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாநாடு தயாரிப்பாளரை தூக்கச் சொன்ன சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்
சென்னை: மாநாடு படத்தை கைவிடவில்லை சிம்புவை மட்டும் தான் நீக்கியுள்ளோம் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவை வைத்து மாநாடு என்கிற படத்தை தயாரிக்கப் போவதாக சுரேஷ் காமாட்சி அறிவிப்பு வெளியிட்டார். மாநாடு படத்திற்காக இங்கிலாந்திற்கு சென்று தனது உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டு நாடு திரும்பிய சிம்புவோ மஃப்டி கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கச் சென்றுவிட்டார்.
சிம்புவுக்காக காத்திருந்து காத்திருந்து பார்த்தும் எதுவும் நடக்காத நிலையில் காலவிரயம் காரணமாக மாநாடு படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டார்.
பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்... அடம் பிடிக்கும் அமலா பால்.. எல்லாம் 'ஆடை'யில்லாமல் நடித்த எபெக்ட்!
வெங்கட் பிரபு
சுரேஷ் காமாட்சியின் அறிக்கையை பார்த்த சிம்பு ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் ஒரு கோரிக்கை விடுத்தார்கள். அதாவது சுரேஷ் காமாட்சியை நீக்கிவிட்டு வேறு ஒரு தயாரிப்பாளரை வைத்து மாநாடு படத்தை எடுக்க வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் அன்பு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அவர்கள் ஆசைப்பட்டதற்கு நேர் எதிராக நடந்துவிட்டது.
சிம்பு
மாநாடு குறித்து சுரேஷ் காமாட்சி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியிருப்பதாவது, படத்தை கைவிடவில்லை. வேறு ஒரு ஹீரோவை வைத்து மாநாடு படத்தை எடுக்க உள்ளோம். எஸ்.டி.ஆர். மட்டும் தான் படத்தில் இல்லை. மற்றபடி அனைவரும் உள்ளனர். புது ஹீரோ யார் என்பது உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.
விளக்கம்
மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் மறுபடியும் வம்பு செய்வதாக பேச்சு கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து சிம்பு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மஃப்டி ரீமேக்கிலும் பிரச்சனை என்று தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், சிம்புவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாம்.
ரசிகர்கள்
மாநாடு படத்தில் சிம்பு அரசியல் பேசுவார், அதை பார்த்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். இந்நிலையில் சிம்பு படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தான் மிகவும் கவலை அடைந்துள்ளனர். சில ரசிகர்களுக்கு சிம்பு மீது லைட்டா கோபமும் ஏற்பட்டுள்ளது. மாநாடு சிம்புவுக்கு தான் சரிப்பட்டு வரும் என்று அவரின் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.