Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மாநாடு 3ம் நாள் வசூலையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த சுரேஷ் காமாட்சி.. சந்தோஷத்தில் சிம்பு ஃபேன்ஸ்!
சென்னை: பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் ஆளுக்கு ஒரு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை சொல்லி வரும் நிலையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே அதிகாரப்பூர்வமாக வசூல் நிலவரத்தை வெளியிட்டு வருகிறார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்த மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25ம் தேதி வெளியானது.
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும் மாநாடு படத்தின் வசூல் பாதிக்கவில்லை.
சிம்பு நன்றி
பல வருடங்கள் கழித்து இப்படியொரு பிரம்மாண்ட வெற்றியை அடைந்துள்ள நடிகர் சிம்பு படம் வெளியானதும் தனக்கு ஆதரவு அளித்த சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றிகளை தெரிவித்து வருகிறார். இப்படியொரு வெற்றியை தனக்கு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார் நடிகர் சிம்பு.
எதிர்பார்க்கப்பட்ட வசூல்
மூன்று நாட்களில் மாநாடு திரைப்படம் 20 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதையும் தாண்டி மாநாடு படத்தின் வசூல் அதிகரித்துள்ளது சிம்பு ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. சில டிராக்கர்கள் 3 நாள் வசூலாக 10 கோடி ரூபாய் தான் மாநாடு பெற்றது என நெகட்டிவிட்டியை பரப்ப அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் சுரேஷ் காமாட்சி.
22 கோடி
சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியான 2 தினங்களில் 14 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக நேற்று சுரேஷ் காமாட்சி ட்வீட் போட்ட நிலையில், இன்று மூன்றாவது நாள் படத்தின் வசூல் எவ்வளவு என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார் மாநாடு தயாரிப்பாளர். 3 நாட்களில் மொத்தம் 22 கோடி ரூபாய் படம் வசூல் செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.
Recommended Video
அதிகரிக்கும் வசூல்
மூன்றாம் நாளான நேற்று சுமார் 8 கோடி ரூபாய் வரை படத்தின் வசூல் அதிகரித்து இருப்பதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் ஹவுஸ்ஃபுல்லான காட்சிகளுடன் திரையரங்குகள் நிரம்பி வழியும் நிலையில், முதல் வாரத்தில் மொத்தம் 30 கோடி ரூபாய் வசூலை மாநாடு தாண்டுவது உறுதியாகி உள்ளது.
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்