twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாரி பஞ்சாயத்து... மொத்த பாரத்தையும் தனுஷ் தலையில் சுமத்திய சரத்குமார்!

    By Shankar
    |

    மாரி படம் ஒருவழியாக ரிலீசாகிவிட்டது. அந்தப் படம் வெற்றியா தோல்வியா என்ற விவகாரத்துக்குள் போகும் முன், படத்தின் தயாரிப்பாளரான சரத்குமார், ஹீரோ தனுஷைப் படுத்திய பாட்டை பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறது மீடியா.

    இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ராதிகா சரத்குமார், சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன். இவர்களின் முந்தை இரு படங்கள் சரியாகப் போகாததால் ஏற்பட்ட நஷ்டத்தைக் காட்டி மாரி படத்தை நிறுத்தப் பார்த்திருக்கிறார்கள்.

    Maari dispute: Rs 11 cr loss for Dhanush

    பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருந்தபோதே, நேற்று அதிகாலை 4 மணிக்கு தனுஷுக்கு போன் அடித்திருக்கிறார் சரத்குமார். 'தம்பி, உங்க சம்பளத்துல ஒரு ரெண்டு கோடி விட்டுக் கொடுத்தா படம் வெளியாகிடும்' என்று கேட்க, தனுஷும் யோசிக்காமல் ஓகே சொல்லிவிட்டாராம்.

    ஏற்கெனவே இந்தப் படத்தின் சேட்டிலைட் சேனல் உரிமையை எந்த டிவியும் வாங்காத நிலையில், ரூ 9 கோடி கொடுத்து தனுஷே வாங்கிக் கொண்டது நினைவிருக்கலாம். இதை தனுஷ் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அதுதான் உண்மை என்கிறது தயாரிப்பு வட்டாரம்.

    ஆக, தனுஷுக்கு இந்தப் படம் நடித்ததால் ஒரு பலனும் இல்லை. அந்த சேட்டிலைட் உரிமை விற்றால்தான் ஏதாவது தேறும் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் தரப்பு.

    English summary
    Actor Dhanush has incurred a huge loss in Maari dispute. He has beared Rs 11 cr to save his producer Sarath Kumar and the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X