Don't Miss!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாவீரன் கிட்டு.. தேசிய விருதுகளைப் பெற்றுத் தரும்... சுசீந்திரன், பார்த்திபன் நம்பிக்கை
சென்னை: விஷ்ணு நடித்துள்ள மாவீரன் கிட்டு படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என அதன் இயக்குநர் சுசீந்திரன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நாயகனாக நடித்துள்ள படம் மாவீரன் கிட்டு. வெண்ணிலா கபடி குழு', 'ஜீவா' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படத்தின் மூலம் சுசீந்திரன், விஷ்ணு கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தின் நாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். நடிகர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் சமுத்திரகனி வெளியிட படத்தின் டீசரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் சுசீந்திரன் பேசுகையில், "அழகர் சாமியின் குதிரை' திரைப்படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல் 'மாவீரன் கிட்டு' திரைப்படத்துக்கும் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஷ்ணு, "நான் இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுடன் மூன்றாவது படத்தில் இணைகிறேன். இப்படம் நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும்'' என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதேபோல், விழாவில் இயக்குநர் சமுத்திரகனி பேசுகையில், "இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது எனக்கு மாபெரும் போராளி மாவீரன் திலீபன் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் அழுத்தமான ஒரு பதிவை தமிழ் சினிமாவுக்கு வழங்குவார் என்று நினைக்கிறேன்" என்றார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, ''இப்படத்தின் டீசரை பார்க்கும்போது சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. இப்படத்தை பார்க்கும்போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவதுபோல் தோன்றுகிறது" எனத் தெரிவித்தார்.
இவர்களைத் தொடர்ந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் பேசுகையில் " 'ஆயிரத்தில் ஒருவன்' , 'அழகி' திரைப்படத்தைப் போன்று இப்படம் எனக்கு கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும். ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் அப்படி. 'ஹவுஸ்புல்' திரைப்படத்துக்கு பின் இப்படத்துக்காக நான் நிறைய விருதுகளை வாங்குவேன் என நம்புகிறேன்" என்றார்.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!