Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனித் தமிழ்நாடு கோரிய தமிழர் விடுதலைப் படை தமிழரசன் பற்றியதா சுசீந்தரனின் மாவீரன் கிட்டு படம்?
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் மாவீரன் கிட்டு என்ற படம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் தளபதி கிட்டுவின் வாழ்க்கை வரலாறா? என்பது குறித்து இயக்குநர் சுசீந்தரன் விளக்கம் அளித்துள்ளார்.
சுசீந்திரனும் விஷ்ணு விஷாலும் 3-வது முறையாக இணையும் படம் மாவீரன் கிட்டு. இதில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன், சூரி ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கான பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரன், மாத்தையாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தளபதி கிட்டு. இலங்கை அரசுடனான யுத்தத்தில் ஒரு காலை இழந்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக செயல்பட்டவர்.
இலங்கை அரசுடனான சமாதான பேச்சுவார்த்தை தொடர்பான ஆவணங்களுடன் 1993-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இலங்கை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது சென்னை அருகே இந்திய கடற்படையால் அவர் பயணம் செய்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் இந்திய கடற்படையிடம் சிக்காமல் கப்பலை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார் கிட்டு.
இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது மாவீரன் கிட்டு என்ற பெயரிலேயே சுசீந்தரன் படம் இயக்குவதால் இது கிட்டுவின் வாழ்க்கை வரலாறாக இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இயக்குநர் சுசீந்தரனோ, இது விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டுவின் வாழ்க்கை வரலாறு கிடையாது. அதே நேரத்தில் 1980களில் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காகப் போராடிய ஒரு வீரனைப் பற்றிய படம்தான் இது என்கிறார்.
1980களில் தமிழக மக்களின் உரிமைக்கான, தனித் தமிழ்நாடு கோரி ஆயுதமேந்தி போராடியவர் தமிழர் விடுதலைப் படையின் தலைவர் தமிழரசன். காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை தர மறுத்து வரும் கர்நாடகாவின் அணைகளைத் தகர்ப்பது உள்ளிட்ட திட்டங்களுக்காக பொன்பரப்பி வங்கியில் கொள்ளையடித்து நிதி சேகரிக்க முயன்ற சம்பவத்தில் உயிரிழந்தவர் தமிழரசன். ஆகையால் அனேகமாக அவரது வாழ்க்கை வரலாற்றைத்தான் தற்போது சுசீந்தரன் 'மாவீரன் கிட்டு' என்ற பெயரில் இயக்கலாம் என தெரிகிறது.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!