Maaveeran: “எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துப்பான்”... மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் மாவீரன்.

மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து மாவீரன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சிவகார்த்திகேயன் நடிப்பை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 Maaveeran: Netizens Trolled Sivakarthikeyans Maaveeran Trailer

எல்லாத்தையும் மேல இருக்குறவன் பார்த்துப்பான்: விஜய் டிவியில் இருந்து சினிமாவில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடியான கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன், கடந்த சில வருடங்களாக சீரியஸ்ஸான படங்களிலும் கமிட்டாகி வருகிறார். கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார்.

இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. டாக்டர் படத்தில் கிடைத்த வெற்றியை டான், பிரின்ஸ் படங்களில் தவறவிட்டுவிட்டார். அதுமட்டும் இல்லாமல் டான், பிரின்ஸ் படங்கள் மிக சாதாரணமாகவே எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் இருந்ததாக ரசிகர்கள் கூறியிருந்தனர். இதனால் தற்போது மாவீரன் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுக்க ரெடியாகிவிட்டார்.

நேற்று வெளியான மாவீரன் ட்ரெய்லரில் சிவகார்த்திகேயனின் ஃபயர் தெரிகிறது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மடோன் அஸ்வின் இயக்கத்தில் காமிக்ஸ் கதை பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளதும் உறுதியாகியுள்ளது. சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் மாவீரன் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சிவகார்த்திகேயனின் குறிப்பிட்ட ஒரு சீனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் காமிக்ஸ் ஸ்க்ரிப்ட் மேக்கராக நடித்துள்ளதாக தெரிகிறது. எப்போதும் பயந்த சுபாவம் கொண்ட அவருக்கு மேலே பார்த்தால் எனர்ஜி கிடைப்பதும், அதன்பின்னர் ஆக்‌ஷனில் வெளுத்து வாங்குவதுமாக நடித்துள்ளார். திடீரென தலையை உயர்த்தி மேலே பார்க்கும் காட்சிகளில், சிவகார்த்திகேயனுக்காக ஒரு வசனத்தை குறிப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆவாரம்பூ படத்தில் கவுண்டமணி, பயில்வான் ரங்கநாதன் நடித்த ஒரு காமெடி காட்சியில், "எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துப்பான்" என்ற ஒரு வசனம் வரும். இந்த வசனத்தை மாவீரன் ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன் மேலே பார்க்கும் காட்சியில் சிங்க் செய்துள்ளனர் நெட்டிசன்கள். அதுமட்டும் இல்லாமல் மேலே பார்த்துக்கொண்ட படம் பார்ப்பவர்கள் சார்பாக மாவீரன் வெற்றிபெற வாழ்த்துகள் எனவும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

அதேநேரம் விஜய்யின் வேலாயுதம், மலையாளத்தில் வெற்றிப் பெற்ற மின்னல் முரளி படங்கள் போல தான் மாவீரன் படமும் இருக்குமோ எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும், இது சிவகார்த்திகேயனுக்கு புது ஜானர் படம் தான் எனவும், மாவீரன் நிச்சயமாக சூப்பர் ஹிட்டாகும் என்றும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X