Don't Miss!
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- News அதிமுக வேண்டாம்? பாமக முடிவுக்கு என்ன காரணம்? மொத்த டேட்டா இதோ!
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
மாயோன் டப்பிங் பணிகளை முடித்த நடிகர் சிபிராஜ்!
சென்னை : தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்று வருபவர் நடிகர் சிபிராஜ்.
நாய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தைத் தொடர்ந்து நடித்து வந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று வருகிறது.
இப்பொழுது இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் மாயோன் என்ற படத்தில் நடித்துள்ளார் அதன் டப்பிங் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது முடிந்துள்ளது.
ராதே ஷ்யாம் படம் எப்போது ரிலீஸ்? அசத்தலாய் அறிவித்த நடிகர் பிரபாஸ்!
தரமான படங்கள்
குறைந்த பட்ஜெட்டில் தரமான திரைப்படங்கள் அதேசமயம் ரசிகர்களின் மனதுக்கு நிறைவான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பெயர் பெற்று வருபவர் நடிகர் சிபிராஜ். நாய்கள் ஜாக்கிரதை படத்தின் வெற்றி இவரின் திரைத்துறை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தனி கவனத்தை
சத்யா, கபடதாரி , வால்டர் என சிபிராஜ் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தனி கவனத்தைப் பெற்றிருக்க இப்பொழுது மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கிஷோர் இயக்கி உள்ளார். கதாநாயகியாக தன்யா நடித்துள்ளார். கே எஸ் ரவிக்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பழமை வாய்ந்த கோயிலை
5 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த கோயிலைச் சுற்றி நடக்கும் மர்மங்களை வைத்து மாயோன் திரைப்படம் உருவாகி உள்ளது. எனவே பரபரப்புக்கும் சுறுசுறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் திரைக்கதை இருக்கும். சென்ற மாதம் படப்பிடிப்பை முடித்த கையோடு படக்குழு டப்பிங் பணிகளை விறுவிறு வேகத்தில் தொடங்கியுள்ளது.
முடிந்தது
அந்த வகையில் சிபிராஜ் தன்னுடைய காட்சிகளின் டப்பிங் பணிகளை முடித்து உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். டபுள் மீனிங் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.