Don't Miss!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாயோன் டப்பிங் பணிகளை முடித்த நடிகர் சிபிராஜ்!
சென்னை : தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்று வருபவர் நடிகர் சிபிராஜ்.
நாய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தைத் தொடர்ந்து நடித்து வந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று வருகிறது.
இப்பொழுது இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் மாயோன் என்ற படத்தில் நடித்துள்ளார் அதன் டப்பிங் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது முடிந்துள்ளது.
ராதே ஷ்யாம் படம் எப்போது ரிலீஸ்? அசத்தலாய் அறிவித்த நடிகர் பிரபாஸ்!
தரமான படங்கள்
குறைந்த பட்ஜெட்டில் தரமான திரைப்படங்கள் அதேசமயம் ரசிகர்களின் மனதுக்கு நிறைவான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பெயர் பெற்று வருபவர் நடிகர் சிபிராஜ். நாய்கள் ஜாக்கிரதை படத்தின் வெற்றி இவரின் திரைத்துறை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தனி கவனத்தை
சத்யா, கபடதாரி , வால்டர் என சிபிராஜ் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தனி கவனத்தைப் பெற்றிருக்க இப்பொழுது மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கிஷோர் இயக்கி உள்ளார். கதாநாயகியாக தன்யா நடித்துள்ளார். கே எஸ் ரவிக்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பழமை வாய்ந்த கோயிலை
5 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த கோயிலைச் சுற்றி நடக்கும் மர்மங்களை வைத்து மாயோன் திரைப்படம் உருவாகி உள்ளது. எனவே பரபரப்புக்கும் சுறுசுறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் திரைக்கதை இருக்கும். சென்ற மாதம் படப்பிடிப்பை முடித்த கையோடு படக்குழு டப்பிங் பணிகளை விறுவிறு வேகத்தில் தொடங்கியுள்ளது.
முடிந்தது
அந்த வகையில் சிபிராஜ் தன்னுடைய காட்சிகளின் டப்பிங் பணிகளை முடித்து உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். டபுள் மீனிங் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.