Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மாயோன் டப்பிங் பணிகளை முடித்த நடிகர் சிபிராஜ்!
சென்னை : தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்று வருபவர் நடிகர் சிபிராஜ்.
நாய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தைத் தொடர்ந்து நடித்து வந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று வருகிறது.
இப்பொழுது இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் மாயோன் என்ற படத்தில் நடித்துள்ளார் அதன் டப்பிங் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது முடிந்துள்ளது.
ராதே ஷ்யாம் படம் எப்போது ரிலீஸ்? அசத்தலாய் அறிவித்த நடிகர் பிரபாஸ்!
தரமான படங்கள்
குறைந்த பட்ஜெட்டில் தரமான திரைப்படங்கள் அதேசமயம் ரசிகர்களின் மனதுக்கு நிறைவான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பெயர் பெற்று வருபவர் நடிகர் சிபிராஜ். நாய்கள் ஜாக்கிரதை படத்தின் வெற்றி இவரின் திரைத்துறை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தனி கவனத்தை
சத்யா, கபடதாரி , வால்டர் என சிபிராஜ் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தனி கவனத்தைப் பெற்றிருக்க இப்பொழுது மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கிஷோர் இயக்கி உள்ளார். கதாநாயகியாக தன்யா நடித்துள்ளார். கே எஸ் ரவிக்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பழமை வாய்ந்த கோயிலை
5 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த கோயிலைச் சுற்றி நடக்கும் மர்மங்களை வைத்து மாயோன் திரைப்படம் உருவாகி உள்ளது. எனவே பரபரப்புக்கும் சுறுசுறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் திரைக்கதை இருக்கும். சென்ற மாதம் படப்பிடிப்பை முடித்த கையோடு படக்குழு டப்பிங் பணிகளை விறுவிறு வேகத்தில் தொடங்கியுள்ளது.
முடிந்தது
அந்த வகையில் சிபிராஜ் தன்னுடைய காட்சிகளின் டப்பிங் பணிகளை முடித்து உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். டபுள் மீனிங் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.