Don't Miss!
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வைரமுத்து மீதான இளையராஜாவின் கோபம் அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது!- மதன் கார்க்கி
தன் அப்பா வைரமுத்து மீதான இளையராஜாவின் கோபம் அடுத்த தலைமுறையிலும் தொடர்வதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
ஒரு பேட்டியில், இளையராஜாவுடன் எப்போது பணியாற்றப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு மதன் கார்க்கி கூறுகையில், "நான் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாகத்தான் இருக்கிறேன். ஆனால், அப்பா (வைரமுத்து) மீது ராஜா சாருக்கு உள்ள கோபம் அடுத்த தலைமுறை வரைக்கும் இருக்கிறது", என்று கூறியுள்ளார்.
இளையராஜா - வைரமுத்து இணை காலத்தை வென்ற பல பாடல்களைத் தந்தது, எண்பதுகளில். 1987-ல் இந்த இணை பிரிந்த பிறகு, இருவரையும் மீண்டும் இணைக்க பலரும் முயன்றனர். ஆனால் நடக்கவில்லை.
இந்த நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். அந்தப் படம் இடம் பொருள் ஏவல் விரைவில் வரவிருக்கிறது.
இளையராஜா இசையில் ஒரு பாடலாவது எழுதிவிட வேண்டும் என வைரமுத்துவின் மகன்கள் இப்போது விருப்பத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.