twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேட்டையில் மதன் கார்க்கியின் 100 வது பாடல்

    By Shankar
    |

    Madhan Karky
    சென்னை: இளம் கவிஞரான மதன் கார்க்கி 100 வது பாடலை எழுதுகிறார், சேட்டை படத்தில்.

    கவிஞர் வைரமுத்துவின் மகன்தான் மதன் கார்க்கி. 2009ம் ஆண்டு வெளியான 'கண்டேன் காதலை' திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

    அந்தப் படத்தில் இடம்பெற்ற ஓடோடி போறேன் என்ற பாடல்தான் இவர் முதலில் எழுதியது.

    அதனைத்தொடர்ந்து எந்திரனில் இவர் எழுதிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பாடல்கள் அவை. குறிப்பாக இரும்பிலே ஒரு இருதயம்.. பாட்டு.

    தொடர்ந்து கோ, நான் ஈ உள்ளிட்ட படங்களில் வெற்றிப் பாடல்களை தந்துள்ள கார்க்கி இன்று வேகமாக வளரும் கவிஞர்களில் முதன்மையாக உள்ளார்.

    இப்போது சேட்டை திரைப்படத்தில் தன்னுடைய 100வது பாடலை எழுதியுள்ளார்.

    முகமூடி, துப்பாக்கி, மாற்றான், நிமிர்ந்து நில், ஐ என இவர் பாடல் எழுதிய படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

    English summary
    Madhan Karky one of the young poets in Tamil cinema is writing his 100th song in Settai movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X