Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சாமி சிலையுடன் சிலுவையா?: விமர்சித்தவர்களுக்கு மாதவன் நெத்தியடி
சென்னை: தான் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து விமர்சித்தவர்களுக்கு மாதவன் தக்க பதில் அளித்துள்ளார்.
ரக்ஷா பந்தன், சுதந்திர தினம், ஆணி அவிட்டம் வாழ்த்து தெரிவித்து மாதவன் புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். மாதவன், அவர் அப்பா, மகன் வேதாந்த் ஆகியோர் புது பூணூல் போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தனர்.
அந்த புகைப்படத்தில் பூஜை அறையில் சாமி சிலைக்கு அருகே சிலுவை இருப்பதை பார்த்தவர்கள் மாதவனை விமர்சித்தனர். தேவாலயங்களில் இந்து கடவுள்களை பார்த்தது உண்டா என்று ஒருவர் மாதவனிடம் கேட்டார். அதை பார்த்த மாதவன் தக்க பதில் அளித்துள்ளார்.
🙏🙏🙏 https://t.co/Imw3SqR2Zb pic.twitter.com/x79cX50aRn
— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 16, 2019
உங்களை போன்ற ஆட்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். அங்கு உள்ள பொற்கோவில் படத்தை பார்த்துவிட்டு, சீக்கியராகிவிட்டீர்களா என்று கேட்காதது வியப்பாக உள்ளது. தர்காக்களில் இருந்து ஆசி பெற்றுள்ளேன். உலகில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத்தலங்களில் இருந்தும் ஆசி பெற்றுள்ளேன். சில பரிசாக வந்தது, சில வாங்கியவை. என் வீட்டில் அனைத்து மதங்களும் ஏற்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு பிபி கஸ்தூரி வேண்டாம், 'டி. கஸ்தூரி' தான் வேண்டும்
என் அடையாளத்தை பெருமையுடன் தக்க வைக்க வேண்டும் என்றும் அதே சமயம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர். எம்மதமும் சம்மதம். என் மகனும் இதையே பின்பற்றுவார் என்று நம்புகிறேன். கோவில் இல்லாத இடங்களில் தர்கா, குருத்வாரா, தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துள்ளேன். நான் இந்து என்பது தெரிந்து அவர்கள் மிகுந்த அன்பும், மரியாதையும் செலுத்தினார்கள். அதற்கு நான் பதிலுக்கு அன்பு செலுத்த வேண்டாமா என்று கேட்டுள்ளார்.
சிலுவை மட்டும் அல்ல ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவிக்க பூணூல் போட்ட புகைப்படம் எதற்கு என்றும் சமூக வலைதளங்களில் மாதவனை விமர்சித்தார்கள். இந்நிலையில் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.
-
யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!