Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மும்பை வெள்ளத்தில் சிக்கித் தவித்த மாதவன், ஹூமா குரேஷி
மும்பை: நடிகர்கள் மாதவன், அனுபம் கேர், நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் மும்பை வெள்ளத்தில் சிக்கித் தவித்துள்ளனர்.
கனமழையால் மும்பை நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அதை தெரிவித்துள்ளனர்.
|
மாதவன்
வெள்ளத்தால் வீட்டிற்குள் போக முடியாமல் காரில் சிக்கிக் கொண்டார் மாதவன். அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மாதவன்.
|
அனுபம் கேர்
கனமழையில் என் காரில் சிக்கிக் கொண்டேன். நண்பரை அழைத்தேன். அவர் தனது மகளுடன் வந்து காப்பாற்றினார். தற்போது அவர் வீட்டில் இருக்கிறேன் என்று பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
ஹூமா குரேஷி
3 மணிநேரமாக தேசிய நெடுஞ்சாலையில் சிக்கினேன்...மக்கள் சக மக்களுக்கு உதவி செய்வதை பார்த்தேன்..இது தான் என் மும்பை. அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.. தற்போது நான் கிளம்புகிறேன் என்று ட்வீட்டியுள்ளார் நடிகை ஹூமா குரேஷி.
|
மகேஷ் பட்
சரியான நேரத்தில் எங்களை காரில் இருந்து காப்பாற்றினார்கள் தாராள மனமுள்ள நபர்கள் என்று பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.