Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மணிரத்னம் ஹீரோக்களை ஒன்றிணைத்தது மாதவனின் 'இறுதிச்சுற்று'
சென்னை: நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் இறுதிச்சுற்று படத்தின் பாடல்களை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர்.
மாதவன், ரித்திகா சிங், ராதாரவி, நாசர் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கும் படம் இறுதிச்சுற்று. தமிழ், இந்தி என்று 2 மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார்.
தமிழில் சி.வி.குமாரும், இந்தியில் ராஜ் குமார் ஹிரானியுடன் இணைந்து மாதவனும் இப்படத்தை தயாரித்து இருக்கின்றனர்.இந்தப் படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பாலா, சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
#AayuthaEzhuthu memories!
#Suriya #Maddy #Siddharth
#IrudhiSuttru @ActorMadhavan pic.twitter.com/JmZraUGOvX
— SuriyaJo Freaks (@DDSuryaJo) January 4, 2016
பாலா இறுதிச்சுற்று பாடல்களை வெளியிட நடிகர் சூர்யா அதனை பெற்றுக் கொண்டார்.சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகி இருக்கும் பாடல்கள் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஏய் சண்டக்காரா மற்றும் வா மச்சானே ஆகிய 2 பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் நாயகி ரித்திகா சிங் படத்தில் தனுஷின் தீவிர ரசிகையாக நடித்திருக்கிறாராம்.
இந்த விழாவில் ஆய்த எழுத்து ஹீரோக்கள் சூர்யா, சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோரை ஒரே மேடையில் பார்க்க முடிந்தது.இதன் மூலம் மணிரத்னம் ஹீரோக்கள் மீண்டும் ஒன்றிணைந்து விட்டனர் என்று அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
7 வருடங்கள் கழித்து மாதவன் தமிழில் சிங்கிள் ஹீரோவாக நடித்து வெளிவரும் படம் இறுதிச்சுற்று என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்