Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தேசிய நீச்சல் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற மாதவன் மகன்
சென்னை: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
மாதவனின் மகன் வேதாந்த் ஒரு நீச்சல் வீரர். அவர் தொடர்ந்து நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்று தாய், தந்தைக்கு பெருமை தேடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தனது மகன் புதிய சாதனை படைத்துள்ளதாகக் கூறி மாதவன் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது மகன் குறித்து கூறியிருப்பதாவது,
உங்களின் ஆசி, வாழ்த்துக்கள், கடவுளின் அருளால் வேதாந்த் மீண்டும் எங்களை பெருமை அடையச் செய்துள்ளார். ஜூனியர்களுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். தேசிய அளவில் தனியாக பதக்கம் வாங்குவது இதுவே முதல் முறை. அடுத்து ஆசிய போட்டிகள். பயிற்சியாளர்கள், குழுவினருக்கு நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.
மாதவனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வேதாந்த் மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று அனைவரும் வாழ்த்துகிறார்கள். தன் மகனை மனதார வாழ்த்துபவர்களுக்கு மாதவன் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியாவுக்காக வேதாந்த் வென்ற முதல் பதக்கம் அது. அப்பொழுதும் மாதவன் தனது மகனை பற்றி பெருமையாக ட்வீட் போட்டார்.
இத்தனை ஆண்டுகளாக நடிகராக இருந்த மாதவன் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். மணிரத்னத்தின் மனம் கவர்ந்த மாதவன் படத்தை இயக்கியுள்ள விதத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
With all you Blessings, good wishes and Gods Grace ... Vedaant makes us very proud again.. 3 golds and a silver at the Junior Nationals Swim meet. His first individual National medals 🏅 . Asian next. Thank you so… https://t.co/CyXuSLxpsx
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 1, 2019
ராக்கெட்ரி படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறார் மாதவன். வயதான நம்பி நாராயணனின் கெட்டப்பில் மாதவனை பார்த்தவர்கள் வியந்துவிட்டனர். காரணம் உண்மையான நம்பி நாராயணன் யார், மாதவன் யார் என்றே அடையாளம் தெரியவில்லை.
தான் நடிகர் என்பதால் மகனும் திரைத்துறைக்கு தான் வர வேண்டும் என்று மாதவன் அடம் பிடிக்கவில்லை. மகனுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யட்டும் என்று முழு சுதந்திரம் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!