Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
அஜித் நடிக்க வேண்டிய படத்தை மாதவன் நிராகரித்து இறுதியாக சூர்யா நடித்தார்...எந்த படம் என தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இயக்குநர்கள் SJ சூர்யா, AR முருகதாஸ், சிங்கம்புலி என்று பலர் இருக்கின்றனர்.
அதில் முக்கியமானவர் இயக்குநர் AR முருகதாஸ். காரணம் இந்திய அளவில் மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கியவர். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா, சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஆமிர் கான், அக்ஷய் குமார் என்று பல முன்னணி நடிகர்களையும் இயக்கியுள்ளார்.
தற்சமயம் H.வினோத் இயக்கத்தில் AK 61 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். அதனை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கவிருக்கிறார். தர்பார் படத்திற்கு பிறகு முருகதாஸ் இன்னும் எந்தப் படத்தையும் அறிவிக்கவில்லை.
கதை பிடிக்காமல் மாதவன் இந்தக் கதையை ரிஜெக்ட் செய்தாரா.. சூர்யாவின் மாஸ் என்டர்டெயினர்!
மிரட்டல்
தீனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் முருகதாஸ் அடுத்ததாக விஜயகாந்தை வைத்து ரமணா என்கிற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார். அதன் பின்னர் அவர் எடுப்பதாக இருந்த படம்தான் 'மிரட்டல்'. நடிகர் அஜித்தை வைத்து ஃபர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியானது. ஆனால் பாலாவின் நான் கடவுள் படத்திற்காக முடி வளர்த்துக் கொண்டிருந்த அஜித்தால் மிரட்டல் படத்திற்காக மொட்டை அடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அந்தப் படத்தில் இருந்து விலகவிட்டதாக கூறப்படுகிறது.
கஜினி
அந்த மிரட்டல் கதை அதன் பின்னர் பல்வேறு நடிகர்களிடம் சென்றுள்ளது. இறுதியாக கஜினி என்ற தலைப்பில் நடிகர் சூர்யா நடித்து மாபெரும் வெற்றி அடைந்தது. தமிழில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் முருகதாஸிற்கு இந்தி மார்க்கெட்டையும் திறந்துவிட்ட படம் என்றால் அது கஜினி. அந்தப் படம் வெளிவந்த சமயம் 400 கோடி வசூல் செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது.
ராக்கெட்ரி
நடிகர் மாதவன் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி'. இதில் சூர்யா கௌரவ வேடத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார். இந்தப் படத்தை புரொமோட் செய்யும் வகையில் சமீபத்தில் நடிகர் மாதவன் மற்றும் சூர்யா லைவ் சேட்டில் பேசிய காணொளி பிரபலமானது. அந்த லைவ் சாட்டில் பேசும் பொழுது, கஜினி திரைப்படம் தனக்கு வந்த கதை எனவும் இரண்டாம் பாதி தனக்கு பிடிக்காத காரணத்தினால் முருகதாஸிடம் அதில் சில மாற்றங்கள் செய்து வரும்படி தான் கூறியதாகவும், அதன் பின்னர் சில ஹீரோக்களிடம் சென்று கடைசியாக நீங்கள் நடித்தீர்கள் என்று மாதவன் கூறியிருந்தார்.
நல்ல நண்பர்கள்
ஆயுத எழுத்து படத்தில் நடித்ததில் இருந்து சூர்யா மற்றும் மாதவன் நல்ல நண்பர்கள். சினிமா துறையில் மாதவனுக்கு இருக்கும் ஒரே ஒரு நெருக்கமான நண்பர் என்றால் அது சூர்யாதானம். கஜினி படத்தில் சூர்யா நடித்தது தனக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றும், அந்தப் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து சூர்யா நடித்தது போல தன்னால் நடித்திருக்க முடியாது என்றும், சூர்யா வாழ்வில் அந்த படம் திருப்புமுனையாக அமைந்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றும் மாதவன் அந்த லைவ் சாட்டில் கூறியிருந்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!