நா போகல.. நா போகல.. எப்படி நடந்தது இது? விஜய் டிவி மீது செம கோபத்தில் மதுமிதாவின் கணவர்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்காத போது தன்னை பங்கேற்றது போல் காண்பித்த விஜய் டிவி மீது மதுமிதாவின் கணவர் மோசஸ் கடும் கோபத்தில் உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா, சக போட்டியாளர்களின் டார்ச்சரால் கையை கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை முன்னிட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் மதுமிதா.
ஆனால் அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் இதுவரை விஜய் டிவி தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிரான்ட் பினாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மோசஸ் பங்கேற்பு
இதில் பிக்பாஸ் நிக்ழச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலில் மதுமிதாவின் கணவர் மோசஸ் பங்கேற்றது போல் காண்பிக்கப்பட்டது.

அழைப்பு விடுக்கப்பட்டதா?
இதனை தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் மதுமிதா மற்றும் அவரது கணவரிடம் பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினர் ரசிகர்கள்.
இது உண்மையா?
இதனை பார்த்த மதுமிதாவின் கணவர் மோசஸ், நான் பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சிக்கு போகவில்லை. இது உண்மையா? புரோகிராம் பார்த்தவங்க சொல்லுங்க என டிவிட்டியிருந்தார்.
கேஸ் போடுங்க
மோசஸின் டிவிட்டை பார்த்த ரசிகர்கள், ஆமாம் விஜய் டிவி செய் ஜிம்மிக்ஸ் வேலையில் உங்களை பயன்படுத்தியது குறித்து நீங்கள் சேனல் மீது வழக்கு தொடரலாம் என்றும் ஐடியா கொடுத்துள்ளனர்.
மோசஸ் கோபம்
இதனை தொடர்ந்து தான் பதிவிட்டுள்ள மற்றொரு டிவிட்டில் ஓ மை காட்.. என கோபமாக இருக்கும் ஈமோஜியை பதிவிட்டுள்ள அவர், நா போகல.. எப்படி இது நடந்தது என கேட்டுள்ளார். மேலும் விஜய் டிவி ஒளிபரப்பிய தனது வீடியோவையும் பதிவேற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications











