Don't Miss!
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கவிலியா பிரேக்கப்பிற்கு சேரப்பா தான் காரணமா? மதுமிதா என்ன சொல்றார் பாருங்க!
கவிலியா காதல் முறிவு குறித்து நடிகை மதுமிதா பேசியுள்ளார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களான கவின், லாஸ்லியா காதல் முறிவு குறித்து முதன்முறையாக நடிகை மதுமிதா கருத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 3ல் டைட்டிலை வெல்லும் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை மதுமிதா. ஆனால் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட சண்டையால் பாதியிலேயே அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
அவர் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக விஜய் டிவிக்கும் மதுமிதாவுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் போய்க்கொண்டிருக்கின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் மற்றும் கொண்டாட்டத்திற்கும் கூட அவர் அழைக்கப்படவில்லை.
மதுமிதா பேட்டி
இந்நிலையில் இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் மதுமிதா. அதில் பிக் பாஸ் வீட்டில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.
சேரன் தான் காரணமா?
அவரிடம் கவிலியா காதல் முறிவிற்கு சேரன் தான் காரணமா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அப்படி என்றால் கவின் - சாக்ஷி காதல் முறிவிற்கு யார் காரணம்?" என எதிர்கேள்வி எழுப்பினார். அதோடு நல்ல காதல்கள் வரவேற்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
கவிலியா காதல்
இந்த சீசனில் கவின், லாஸ்லியா இடையேயான காதல் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. அவர்கள் பெயரில் கவிலியா என்ற ஆர்மிக்களும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.
காதல் முறிவு
இதனால் அவர்கள் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இவர்களது காதல் முறிவிற்கு இயக்குனர் சேரன் தான் முக்கிய காரணம் என ஆரம்பத்தில் இருந்தே விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் சேரனும் கூட காட்டமாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.