Don't Miss!
- News ஃபுட் பாய்ஸன் காரணமாக திடீரென டெல்லி திரும்பிய ராகுல் காந்தி.. இன்று மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகையை கற்பழித்த வழக்கு: இந்திப் பட இயக்குனர் மீது விசாரணைக்கு தடை!
பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான மதுர் பண்டார்கர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், ஹீரோயின் வாய்ப்பு தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி கற்பழித்து விட்டதாக, கடந்த 2004 ம் ஆண்டு மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் நடிகை பிரீத்தி ஜெயின் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார்.
நடிகையின் புகாரில் முகாந்திரம் இருப்பதால் மதுர் பண்டார்கர் இந்த வழக்கை சந்திக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இயக்குநர் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் இயக்குநர் மதுர் பண்டர்கருக்கு எதிரான கிரிமினல் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
வழக்கு தொடர்பாக மராட்டிய மாநில அரசு மற்றும் நடிகை பிரீத்தி ஜெயின் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.