Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகையை கற்பழித்த வழக்கு: இந்திப் பட இயக்குனர் மீது விசாரணைக்கு தடை!
பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான மதுர் பண்டார்கர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், ஹீரோயின் வாய்ப்பு தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி கற்பழித்து விட்டதாக, கடந்த 2004 ம் ஆண்டு மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் நடிகை பிரீத்தி ஜெயின் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார்.
நடிகையின் புகாரில் முகாந்திரம் இருப்பதால் மதுர் பண்டார்கர் இந்த வழக்கை சந்திக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இயக்குநர் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் இயக்குநர் மதுர் பண்டர்கருக்கு எதிரான கிரிமினல் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
வழக்கு தொடர்பாக மராட்டிய மாநில அரசு மற்றும் நடிகை பிரீத்தி ஜெயின் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.