Don't Miss!
- News 320 ஆக உயர்ந்த சர்க்கரை அளவு.. திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு முதல் முறையாக இன்சுலின் ஊசி
- Lifestyle சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Finance தங்கம் விலை இன்று 1450 ரூபாய் சரிவு.. இதுதான் திரில்லிங்கான நேரம்.. தங்கத்தை இப்போ வாங்கலாமா..?
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அந்த வெடுக் வெடுக் இடுப்பு.. மறக்க முடியுமா மாதுரியை.. வேற மாதிரி வர்றாங்கண்ணே!
மும்பை : சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பாலிவுட் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம்வந்தவர் மாதுரி தீட்சித். டாக்டர் ஶ்ரீராம் மாதவ் உடனான திருமணத்துக்குப் பின், நடிப்புக்கு இடைவெளிவிட்ட மாதுரி தீட்சித், பின்னர் சில படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்தார்.
தன் தனித்தன்மை வாய்ந்த நடன அசைவுகளால், ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் மாதுரி. இவரது நடனத்துக்காகவே, பல படங்கள் வெள்ளி விழாவைக் கடந்து ஓடின. இன்றும் அவரது ரசிகர்களுக்கு அவர் மீதான க்ரேஸ் அப்படியே இருக்கிறது எனலாம்.
தற்போது, மீண்டும் முழு வீச்சில் திரையுலகில் களம் இறங்கியுள்ளார் மாதுரி. ஆனால், இந்தமுறை நடிகையாக அல்ல தயாரிப்பாளராக. ஆர்.என்.எம் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவக்கியுள்ளார். முதல் முயற்சியாக இப்போது மராத்தி மொழித் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறார் மாதுரி.
இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முடிந்துள்ளன. இதுபற்றி மாதுரி கூறுகையில், 'என்னையும், சினிமாவையும் அவ்வளவு எளிதாகப் பிரித்து விட முடியாது. நடிப்பு, நடனம், தயாரிப்பு என ஏதாவது ஒரு விஷயத்தில் தொடர்ந்து திரைத்துறையில் பணியாற்றுவேன்.
இப்போது, மராத்தியில் படம் தயாரிக்கிறேன். இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களையும் தயாரிப்பேன்' என்கிறார்.