Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
டிவி நிகழ்ச்சியில் முற்றிய சண்டை: முன்னாள் காதலரை ஓங்கி அறைந்த நடிகை
மும்பை: நடன நிகழ்ச்சிக்காக பயிற்சி எடுத்தபோது நடிகை மதுரிமா துலி தனது முன்னாள் காதலரான விஷால் ஆதித்யா சிங்கை அறைந்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மதுரிமா துலியும், விஷால் ஆதித்யா சிங்கும் காதலித்து திருமணம் கூட நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணம் நிச்சயமான வேகத்தில் பிரிந்துவிட்டனர்.
மதுரிமாவுக்கு வேறு ஒரு நடிகருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக விஷால் தெரிவித்தார். அதை மதுரிமா மறுத்தார். இப்படி எப்பொழுது பார்த்தாலும் மோதிக் கொண்டிருக்கும் அவர்களை சல்மான் கான் தயாரிக்கும் நாச் பால்யே 9 நடன நிகழ்ச்சியில் ஜோடியாக ஆட வைத்துள்ளனர்.
ரத்தினமாக ஜொலிக்கும் விக்ராந்துக்கு ஒரு ஹிட் பார்சல்: பக்ரீத் ட்விட்டர் விமர்சனம்
நிகழ்ச்சிக்காக ஒத்திகை பார்க்கும்போது மதுரிமாவும், விஷாலும் அடிக்கடி சண்டை போடுகிறார்ள். இந்நிலையில் நேற்று மாலை ஒத்திகை நடந்த போது விஷால், மதுரிமா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி மதுரிமா விஷாலை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.
சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதாவது,
மதுரிமாவும், விஷாலும் ஆக்ரோஷமாக விவாதிக்கின்றனர். அப்பொழுது மதுரிமா கோபமாக ஒரு ஓரமாக செல்ல, விஷாலும் பின்னாலேயே செல்கிறார். இதையடுத்து நடனக்குழுவை சேர்ந்த அனைவர் முன்பும் மதுரிமா விஷாலை அறைந்துள்ளார்.
முன்னாள் காதலர்களை ஜோடியாக ஆட வைத்தால் இந்த சண்டை எல்லாம் ஏற்படும் என்பது சல்மான் கானுக்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் இந்த சண்டை சச்சரவும் நிகழ்ச்சிக்கு உதவும் என்று நினைக்கிறார்கள்.
சொல்லப் போனால், முன்னாள் காதலர்கள் கலந்து கொண்டுள்ளதாலேயே பலர் நாச் பால்யே நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். மேடையில் விஷால் போலியாக இருப்பதாக மதுரிமா குற்றம் சாட்டினார். அதற்கு விஷாலோ நான் உண்மையாகத் தான் இருக்கிறேன், மதுரிமா வேண்டும் என்றே புகார் கூறுகிறார் என்றார்.
நாச் பால்யே நிகழ்ச்சியை விட இந்த மதுரிமா, விஷால் சண்டை பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.