Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அரைவேக்காட்டு திரைக்கதை, மட்டமான நடிப்பு... 'டமாலான' மெட்ராஸ் கபே!
ஜான் ஆபிரகாமின் மெட்ராஸ் கபே படம் ரசிகர்களைக் கவரவில்லை. முதல் நாளிலேயே வசூல் ரீதியாக பெரும் தோல்விப் படமாக சுருண்டுவிட்டது.
ராஜீவ் காந்தி கொலை மற்றும் இலங்கையில் நடந்த தமிழீழப் போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
படத்தில் ரா அதிகாரியாக வருகிறார் ஜான் ஆபிரகாம். இந்தப் படம் தமிழிலும் இதே பெயரில் டப் செய்யப்பட்டது.
தமிழர்களை நம்பத்தகாதவர்களாகவும், விடுதலைப் புலிகளை மிக மோசமானவர்களாகவும் சித்தரித்திருந்தனர் இந்தப் படத்தில்.
இந்த விஷயம் வெளியானதுமே தமிழகம் மற்றும் புதுவையில் எந்த மொழியிலும் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என்று தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அறிவித்துவிட்டனர்.
ஆனால் படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருந்தார் ஜான் ஆபிரகாம். இவர்தான் படத்தின் தயாரிப்பாளரும்கூட.
இந்தப் படத்தை தங்களால் திரையிட முடியாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டனர் தமிழக - புதுவை திரையரங்கு உரிமையாளர்கள். மற்ற இடங்களில் வெளியானது மெட்ராஸ் கபே.
ஆனால் எங்குமே இந்தப் படத்துக்கு போதிய கூட்டம் இல்லை. பார்த்தவர்களும் படு குப்பை இந்தப் படம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ரா அதிகாரிகள் பற்றிய ஆவணப்படம் மாதிரிதான் இதை எடுத்திருக்கிறார்கள். அதே போல படமெடுத்த இந்த குழுவுக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிய அடிப்படை உண்மை கூட தெரியவில்லை. நினைத்த மாத்திரத்தில் புலிகளின் தலைமையைச் சந்திப்பது போன்ற அபத்தமான காட்சிகள் நிறைய உள்ளன படத்தில், என கூறியுள்ளனர்.
காட்சிகளை அமைத்த விதத்தில் செயற்கைத் தனம் மிகுந்திருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் படத்தில் வரும் கதை, கேரக்டர்கள் யாரையும் குறிப்பிடுவதல்ல என டைட்டில் போட்டுவிட்டு, பின்னர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் (எல்டிஎப்-என மாற்றி!), பிரபாகரன் (பாஸ்கரன்), ரா என உண்மைச் சம்பவங்களையும், மனிதர்களையும் தொட்டுள்ளனர். ஆனால் அதையும் உண்மையை உள்ளபடி சொல்லவில்லை.
படத்தின் வசனங்கள் மகா மட்டமாக உள்ளதாகவும் விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன. ஜான் ஆப்ரகாமுக்கு இந்த வேடமும் பொருந்தவில்லை, அவருக்கு சுத்தமாக நடிக்கவும் வரவில்லை என்றும் எழுதியுள்ளனர்.
பொழுது போக்கு அம்சங்களும் இல்லாமல், உண்மையை நேர்மையாக படமாக்கத் தெரியாமல் எடுக்கப்பட்ட இந்தப் படம் யாரையும் கவராமல் போய்விட்டதால், பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.