Don't Miss!
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் என்றாலே விளம்பரம் செய்வதில் சைலண்டாக மிராக்கிள் செய்வார்கள்
Recommended Video
சென்னை : இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன்,
சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குகிறார். இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார்.
சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் போன்றவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 'வானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல் பாடல், இரண்டாவது பாடல், டீஸர், டிரைலர் & இசை வெளியீடு ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். இறுதி கட்ட பணிகள் முடிந்து 2020 ஜனவரியில் இப்படம் வெளியிடப்படும்.
விக்ரம் பிரபு ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் இது . மிக பெரிய வெற்றி ஒன்றை கொடுத்தாக வேண்டும் என்ற சூழ்நிலை விக்ரம் பிரபுவிற்கு இப்போது உள்ளது . கும்கி படம் கொடுத்த வெற்றி மாபெரும் வெற்றி ஆகும் . அதன் பிறகு நிறைய நல்ல படங்கள் செய்தும் பிரமாண்டமான வெற்றி என்று இன்னும் சொல்ல முடியாமல் சரியான ஒரு கதைக்காக காத்துகொண்டு இருந்த விக்ரம் பிரபுவிற்கு இந்த படம் நல்ல தீனி போடும் என்று பலரும் சொல்லுகின்றனர்.
ஐஸ்வர்யாவின் எதார்த்தமான நடிப்பும் மடோனாவின் பதார்தமான பார்வையும் பல வித்யாசமான பாடல்களை கொடுக்க போகிறது . நிஜ ஜோடியான சரத்குமார் ராதிகா இதில் நடிப்பது மேலும் சிறப்பு . பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி திரையில் தோன்றுகிறார்கள்.
நந்தா நடிப்பில் எதை செய்தாலும் நேர்த்தியாக செய்ய கூடியவர் இந்த முறையும் ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்ததால் வெளுத்தி காட்டியுள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் சொல்லுகின்றன .
இந்த ஒட்டுமொத்த கூட்டணியும் உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்க வேண்டும் என்று காத்துகொண்டு இருக்கின்றன. பொறுத்து இருந்து பார்ப்போம்.