Don't Miss!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மனைவி இறந்த 6 மாதத்தில் புதுமாப்பிள்ளையான மதுரை முத்து: காரணம் இருவர்
மதுரை: நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தனது மனைவி இறந்த 6 மாதத்தில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள்(32) கடந்த பிப்ரவரி மாதம் கோவிலுக்கு காரில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி பலியானார். இதனால் மனமுடைந்த முத்து இனி சாமியே கும்பிட மாட்டேன் என்றார்.
என் மனைவி தான் இனி என் தெய்வம் என உருக்கமாக தெரிவித்தார்.
சோகம்
மனைவி கனவில் வர வேண்டி அவரின் சேலையை போர்த்திக் கொண்டு தூங்கியதாக முத்து சமூக வலைதளத்தில் தெரிவித்தார். மனைவி தன்னுள் தெய்வமாக வாழ்கிறாள் என்று ஃபீல் பண்ணினார் முத்து.
பாவம்
மதுரை முத்து ஃபேஸ்புக்கில் தனது மனைவியை நினைத்து புலம்பியதை பார்த்த ரசிகர்கள் கடவுளே இந்த மனுஷனுக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம் என கவலை அடைந்தனர்.
இரண்டாவது திருமணம்
மனைவியை நினைத்து நினைத்து உருகிய முத்து அவர் இறந்த 6 மாதத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தனது மனைவியின் நெருங்கிய தோழியான நீத்தியையே மணந்தார் முத்து.
மகள்
படப்பிடிப்பு, நிகழ்ச்சிகள் என தான் ஊர், ஊராக, நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கும்போது 2 மகள்களையும், வயதான பெற்றோரையும் பார்த்துக் கொள்ளவே இரண்டாவது திருமணம் செய்தாராம் முத்து. நீத்தியும் தனது தோழியின் பிள்ளைகளை தனது பிள்ளைகளாகவே கருதுவதால் தான் பாக்கியசாலி என முத்து தெரிவித்துள்ளார்.