Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கிடா வெட்டு கிடையாது.. ஆனா விருந்து உண்டு! - மதுரை ரஜினி ரசிகர் மன்றம்
மதுரை: மதுரையில் நாளை மறுதினம் 100 ஆடுகளை வெட்டி கிடா விருந்து நடத்தப் போவதாக அறிவித்திருந்த ரஜினி ரசிகர்கள், அதில் ஒரு மாற்றம் செய்துள்ளனர். ஆடுகளை வெட்டுவதை நிறுத்திவிடுவதாகவும், ஆனால் கறி விருந்து மட்டும் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததை வரவேற்றுக் கொண்டாடும் வகையில் மதுரையில் 100 ஆடுகளை வெட்டி கறி விருந்து தர மதுரை ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த தகவல் வெளியானதும், பீட்டா அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பொது இடத்தில் 100 ஆடுகளை வெட்டுவது சட்ட விரோதம்... எனவே தடுத்து நிறுத்துமாறு ரஜினிக்கு கடிதம் எழுதினர்.
ரஜினி இப்போது மலேசியாவில் உள்ளார். இந்தக் கடிதத்துக்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை ரஜினிகாந்த்.
ஆனால் மதுரை ரசிகர்கள் இப்போது புதிய முடிவை எடுத்துள்ளனர். திட்டமிட்டபடி ஜனவரி 7-ம் தேதி கறி விருந்து நடத்துவதென்றும், ஆனால் 100 ஆடுகளை வெட்டும் திட்டத்தைக் கைவிடுவதாகவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.