Don't Miss!
- News 5 வருடமாக.. நீங்க பட்ட கஷ்டமெல்லாம் சரியாக போகுது! கன்னி ராசியை புரட்டி போடும் குரு பெயர்ச்சி.. பலன்
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கிடா வெட்டு கிடையாது.. ஆனா விருந்து உண்டு! - மதுரை ரஜினி ரசிகர் மன்றம்
மதுரை: மதுரையில் நாளை மறுதினம் 100 ஆடுகளை வெட்டி கிடா விருந்து நடத்தப் போவதாக அறிவித்திருந்த ரஜினி ரசிகர்கள், அதில் ஒரு மாற்றம் செய்துள்ளனர். ஆடுகளை வெட்டுவதை நிறுத்திவிடுவதாகவும், ஆனால் கறி விருந்து மட்டும் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததை வரவேற்றுக் கொண்டாடும் வகையில் மதுரையில் 100 ஆடுகளை வெட்டி கறி விருந்து தர மதுரை ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த தகவல் வெளியானதும், பீட்டா அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பொது இடத்தில் 100 ஆடுகளை வெட்டுவது சட்ட விரோதம்... எனவே தடுத்து நிறுத்துமாறு ரஜினிக்கு கடிதம் எழுதினர்.
ரஜினி இப்போது மலேசியாவில் உள்ளார். இந்தக் கடிதத்துக்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை ரஜினிகாந்த்.
ஆனால் மதுரை ரசிகர்கள் இப்போது புதிய முடிவை எடுத்துள்ளனர். திட்டமிட்டபடி ஜனவரி 7-ம் தேதி கறி விருந்து நடத்துவதென்றும், ஆனால் 100 ஆடுகளை வெட்டும் திட்டத்தைக் கைவிடுவதாகவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.