Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சர்கார் பட டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து
Recommended Video
மதுரை: மதுரையில் சர்கார் படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த தியேட்டர்களின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் வரும் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திர பாண்டி என்பவர் உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது,
சர்கார்
நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு புதிய திரைப்படங்கள் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக விஜய் நடித்த சர்கார் திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படம் மதுரையில் 5க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகிறது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. ஆன்லைனில் ஒரு டிக்கெட் ரூபாய் 500 முதல் 1000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1000 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிப்பது விதிமீறல்.
டிக்கெட்
16.10 2017 ஆம் ஆண்டு உள்துறை ( சினிமா ) வெளியிடப்பட்ட அரசாணையில் கட்டணங்கள் குறித்து வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கபட வேண்டும் எனவும், மற்ற திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 100 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், ஏசி திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாய் என்றும் அரசாணையில் உள்ளது. ஆனால் அரசாணையை பின்பற்றாமல் பலமடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரை
மதுரையில் உள்ள தனியார் அமைப்புகள் மூலம் சர்கார் படத்தின் ஒரு டிக்கெட் ரூபாய் 1000 வரை விற்கப்படுகிறது. இந்த சினிமா டிக்கெட் கட்டணம் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருகிறது. இதுபோன்ற கூடுதல் கட்டணம் வசூல் செய்வதால் ஜிஎஸ்டி வருவாய் குறைய வாய்ப்புள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் 2017 ல் உள்துறை செயலர் ( சினிமா ) வெளியிடபட்ட அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க உரிய உத்தரவிட வேண்டும் என்று மகேந்திர பாண்டி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
விசாரணை
மகேந்திர பாண்டி தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. சர்கார் படத்தை வெளியிடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தீர்ப்பு
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
கமல்ஹாசனின் மாமா மறைவு.. கண்கலங்கி இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன்