Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல..' - விஜயகாந்த் மகன் படத்தில் சமூக அவலங்களைச் சாடும் பாடல்!
சென்னை : விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தற்போது, ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கும் 'மதுரவீரன்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் 'என்ன நடக்குது நாட்டுல...' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
சண்முகபாண்டியன் நடித்த முதல் படமான 'சகாப்தம்' தோல்வியடைந்ததை அடுத்து இந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர். இந்நிலையில், 'மதுரவீரன்' படத்தின் ஒரு பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.
'என்ன நடக்குது நாட்டுல,
அதை எடுத்துச் சொல்லணும் பாட்டுல..
கொள்ளை அடிச்சவன் கூட்டுல,
நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல..
எதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம,
அடங்கி ஒடுங்கி கிடப்பதால ஆளுக்காளு நாட்டாம..'
என நீள்கிறது பாடல் யுகபாரதியின் வரிகளில்.
சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சாடும் வகையில் இந்தப் பாடல் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெயமூர்த்தி என்பவர் இப்பாடலைப் பாடியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.