Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மோசமான படங்களாக இருந்தாலும் தொழிலுக்கு துரோகம் செய்யாமல் இசையமைப்பேன்! - இளையராஜா
சென்னை: ஒரு படம் எத்தனை மோசமாக இருந்தாலும், எனக்குப் பிடிக்காவிட்டாலும், என் தொழிலுக்கு துரோகம் செய்யாமல் சிறப்பான இசையையே தருவேன், என்றார் இசைஞானி இளையராஜா.
சுப்ரமணியம் சிவாவிடம் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக் ரிஷி இயக்கியிருக்கும் புதிய படம் 'மேகா'. அஷ்வின் - ஸ்ருஷ்டி ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஆல்பர்ட் ஜேம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஜெ.எஸ்.கே நிறுவனம் வெளியிடுகிறது.
படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடந்தது. இதில் இசைஞானி இளையராஜா பங்கேற்றார். அப்போது இந்தப் படத்துக்காக அவர் ஹங்கேரி சென்று இசையமைத்ததன் வீடியோ காட்சிகளை திரையிட்டுக் காட்டினர்.
நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:
பாரதிராஜாவோட முதல் மரியாதை படம். பின்னணி இசைக்காக எனக்கு முதல் முறையாக போட்டுக் காட்டினார்கள். படம் பார்த்தேன். எனக்குப் பிடிக்கல. பாரதி கேட்டார்.. நான் ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டேன். 'சரி அவனுக்கு படம் பிடிக்கல..' என்று உடனிருந்தவர்களிடம் சொன்னார்.
அடுத்த நாள் பின்னணி இசையமைக்க ஆரம்பித்தேன். கடைசி ரீல்.. அதில் ராதா சிறைக்குள் இருக்கும் காட்சி. சிவாஜி வருவார்.. ராதா அவரைப் பார்க்க வருவார். அந்தக் காட்சிக்கான பின்னணி இசையைக் கேட்டதும், பாரதி ராஜா கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். (பாரதிராஜா போல அழுது காட்டி) 'உனக்குப் பிடிக்காத படத்துக்கே இப்படி இசையமைச்சிருக்கியேடா' என்று தழுதழுத்தார்.
அது எத்தனை நல்ல படமாக, மோசமான படமாக இருந்தாலும், எனக்குப் பிடிச்சிருந்தாலும் பிடிக்காவிட்டாலும், தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நல்ல இசையைத்தான் தருகிறேன். என் தொழிலுக்கு, என் சரஸ்வதிக்கு, சப்தஸ்வரங்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்.
நீங்கள் தூ என்று துப்பும் படத்தைக் கூட நான் நான்கு முறை பார்க்கிறேன். சலித்துக் கொண்டதில்லை. காரணம் அது என் தொழில்.
(பேச்சின் இடையில் மேகா இயக்குநரைப் பார்த்து, 'இங்க வாங்க டைரக்டர்..' என்று தன் அருகே அழைத்தார் ராஜா.)
இந்தப் படம் மேகாவை நன்றாகவே எடுத்திருந்தார் இந்த இயக்குநர். படத்தின் முதல் ரீலுக்கு இசையமைத்துவிட்டு, அவருக்கு போட்டுக் காட்டினேன்.
இளையராஜா: 'எப்படி இருந்தது?'
மேகா இயக்குநர்: இசையோடு கேட்டபிறகு அந்தப் படம் நான் நினைத்ததை விட மிகச் சிறப்பாக இருந்தது. இது நான் எடுத்த படமா என பிரமித்தேன்.
இளையராஜா: இப்படித்தான் எல்லா இயக்குநர்களும் சொல்வார்கள்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆல்பர்ட் பற்றிச் சொல்ல வேண்டும். சிலரைப் பார்த்தால், ஏன்டா பார்த்தோம் என்று தோன்றும்.. சிலர் வரும்போது, 'இவன் எதுக்கு இங்க வர்றான்'னு இருக்கும்.
ஆனால் ஆல்பர்ட்டை பார்த்த போதே அவரைப் பிடித்துவிட்டது. முதல் நாள் என்னிடம் எப்படி இருந்தாரோ, இந்த நிமிடம் வரை அதே மாதிரிதான் நடந்து கொள்கிறார். மிக நல்ல மனிதர். அவருக்காகவே இந்தப் படத்தை ஒப்புக் கொண்டேன்.
கார்த்திக் நன்றாக இயக்கியுள்ளார் என்பதே அவருக்கான ஆசீர்வாதம்தான்," என்றார்.