Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினிக்குப் பிறகு நூற்றாண்டு சிறப்பு விருது பெற்ற இளையராஜா!
கோவா: இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசின் சிறப்பு விருது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி கவுரவித்தார் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி.
கோவாவில் நேற்று சர்வதேச திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் இந்திய திரை இசையுலகில் பெரும் சாதனைப் படைத்துள்ள இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அருண் ஜேட்லி மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினார்கள். இந்த விழாவில் பேசிய இளையராஜா, அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சிறந்த இசைக்காக நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ள இளையராஜாவுக்கு, மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியுள்ளது. அவருக்கு பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும் என ரசிகர்களும் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளது நினைவிருக்கலாம்.