Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
40 ஆண்டுகள் கூடவே பயணித்த தபேலா கலைஞர் மரணம்.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய இளையராஜா!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் குழுவில் இருந்த தபேலா கலைஞர் கண்ணையா காலாமானார். அவரது உடலுக்கு இளையராஜா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் 1976 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
46 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகின் அசைக்கமுடியாத ஜாம்பவானாக உள்ளார் இளையராஜா. இவரிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது இளையராஜா திரையுலகுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே உடனிருந்தவர் கண்ணையா.
இளையராஜா இசைக்குழுவில் தபேலா கலைஞராக இருந்தவர் கண்ணையா. இளையராஜா இசையமைத்த ஏறத்தாழ அனைத்து படங்களிலும் தபேலா வாசித்தவர் கண்ணையா.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கண்ணையா இன்று காலமானார். சென்னையில் அவரது வீட்டில் வைக்கப்பட்ட கண்ணையாவின் உடலுக்கு இசைஞானி இளையராஜா நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். காலை 6 மணிக்கே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் இளையராஜா.