Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
40 ஆண்டுகள் கூடவே பயணித்த தபேலா கலைஞர் மரணம்.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய இளையராஜா!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் குழுவில் இருந்த தபேலா கலைஞர் கண்ணையா காலாமானார். அவரது உடலுக்கு இளையராஜா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் 1976 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
46 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகின் அசைக்கமுடியாத ஜாம்பவானாக உள்ளார் இளையராஜா. இவரிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது இளையராஜா திரையுலகுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே உடனிருந்தவர் கண்ணையா.
இளையராஜா இசைக்குழுவில் தபேலா கலைஞராக இருந்தவர் கண்ணையா. இளையராஜா இசையமைத்த ஏறத்தாழ அனைத்து படங்களிலும் தபேலா வாசித்தவர் கண்ணையா.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கண்ணையா இன்று காலமானார். சென்னையில் அவரது வீட்டில் வைக்கப்பட்ட கண்ணையாவின் உடலுக்கு இசைஞானி இளையராஜா நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். காலை 6 மணிக்கே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் இளையராஜா.