Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
40 ஆண்டுகள் கூடவே பயணித்த தபேலா கலைஞர் மரணம்.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய இளையராஜா!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் குழுவில் இருந்த தபேலா கலைஞர் கண்ணையா காலாமானார். அவரது உடலுக்கு இளையராஜா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் 1976 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
46 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகின் அசைக்கமுடியாத ஜாம்பவானாக உள்ளார் இளையராஜா. இவரிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது இளையராஜா திரையுலகுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே உடனிருந்தவர் கண்ணையா.
இளையராஜா இசைக்குழுவில் தபேலா கலைஞராக இருந்தவர் கண்ணையா. இளையராஜா இசையமைத்த ஏறத்தாழ அனைத்து படங்களிலும் தபேலா வாசித்தவர் கண்ணையா.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கண்ணையா இன்று காலமானார். சென்னையில் அவரது வீட்டில் வைக்கப்பட்ட கண்ணையாவின் உடலுக்கு இசைஞானி இளையராஜா நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். காலை 6 மணிக்கே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் இளையராஜா.