Don't Miss!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜெயிக்கப்போறது சிங்கத்தோட பலமா நரியோட தந்திரமா - வைரலாகும் மாஃபியா டீசர்
சென்னை: நடிகர் அருண் விஜய் நடித்த மாஃபியா திரைப்படத்தின் டீசரை பார்த்த ரஜினிகாந்த் பாராட்டியிருந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் அதிகாரபூர்வமாக டீசரை வெளியிட்டார். இதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அருண் விஜய் நடித்த தடம் திரைப்படம் வெற்றி பெற்றாலும், அதற்கு அடுத்த வெளிவந்த பிரமாண்டா தயாரிப்பான சாஹோ படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாததால் வசூலும் எதிர்பார்த்த அளவில் இல்லை.
நடிகர் அருண் விஜய் தடம், சாஹோ திரைப்படங்களை தொடர்ந்து தற்போது மாஃபியா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசூரன், நாடக மேடை ஆகிய திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இதனால் அடுத்ததாக நடித்துவரும் மாஃபியா படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.
குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்யுடன், நடிகர் பிரசன்னா, நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
ஹீரோக்கள் மட்டும்தானா.. ஹீரோயின்களும் அசத்துவாங்கம்மா.. !
இந்த திரைப்படத்தில் முதல் பகுதி கதை மட்டும் தான் வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது, ஏனென்றால் திரைப்படத்தின் தலைப்பின் கீழ் சேப்டர் 1 என்ற எழுதப்பட்டுள்ளது. இதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பகுதி கதையும் நிச்சயம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன் கீழ் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜாக்ஸ் பேஜோய் இசையில், கோகுல் பெனோய்யின் ஒளிப்பதிவில் எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பில் மாஃபியா திரைப்படம் தயாராகி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை நடிகர் ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். டீசரை பார்த்த ரஜினி, நல்ல பனி, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருந்தார்.
தற்போது இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். இதில் நடிகர் அருண் விஜய்யின், ஜெயிக்கப்போவது சிங்கத்தோட பலமா என்ற வசனமும் நடிகர் பிரச்சன்னா பேசும் நரியோட தந்திரமா என்ற வசனமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
-
Ghilli movie: 20 வருஷம் கழித்து நிறைவேறிய கில்லி அம்மாவின் ஆசை.. இன்னா குத்து குத்துறாங்க!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!