Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜெயிக்கப்போறது சிங்கத்தோட பலமா நரியோட தந்திரமா - வைரலாகும் மாஃபியா டீசர்
சென்னை: நடிகர் அருண் விஜய் நடித்த மாஃபியா திரைப்படத்தின் டீசரை பார்த்த ரஜினிகாந்த் பாராட்டியிருந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் அதிகாரபூர்வமாக டீசரை வெளியிட்டார். இதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அருண் விஜய் நடித்த தடம் திரைப்படம் வெற்றி பெற்றாலும், அதற்கு அடுத்த வெளிவந்த பிரமாண்டா தயாரிப்பான சாஹோ படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாததால் வசூலும் எதிர்பார்த்த அளவில் இல்லை.
நடிகர் அருண் விஜய் தடம், சாஹோ திரைப்படங்களை தொடர்ந்து தற்போது மாஃபியா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசூரன், நாடக மேடை ஆகிய திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இதனால் அடுத்ததாக நடித்துவரும் மாஃபியா படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.
குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்யுடன், நடிகர் பிரசன்னா, நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
ஹீரோக்கள் மட்டும்தானா.. ஹீரோயின்களும் அசத்துவாங்கம்மா.. !
இந்த திரைப்படத்தில் முதல் பகுதி கதை மட்டும் தான் வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது, ஏனென்றால் திரைப்படத்தின் தலைப்பின் கீழ் சேப்டர் 1 என்ற எழுதப்பட்டுள்ளது. இதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பகுதி கதையும் நிச்சயம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன் கீழ் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜாக்ஸ் பேஜோய் இசையில், கோகுல் பெனோய்யின் ஒளிப்பதிவில் எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பில் மாஃபியா திரைப்படம் தயாராகி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை நடிகர் ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். டீசரை பார்த்த ரஜினி, நல்ல பனி, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருந்தார்.
தற்போது இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். இதில் நடிகர் அருண் விஜய்யின், ஜெயிக்கப்போவது சிங்கத்தோட பலமா என்ற வசனமும் நடிகர் பிரச்சன்னா பேசும் நரியோட தந்திரமா என்ற வசனமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!