Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கண்டுக்கினியா... 'டங்காமாரி'ன்னா இத்தான் அர்த்தமாம்!
சமீபத்தில் வெளியான பாடல்கள் படு சூப்பர் ஹிட்டானது அனேகன் படத்தில் இடம்பெற்ற 'டங்காமாரி ஊதாரி புட்டுக்கின நீ நாறி'...
மத்திய, வட சென்னைவாசிகளுக்கு டங்காமாரி பழக்கமான வார்த்தை. ஆனால் மற்றவர்கள் ஏதோ அதை கேவலமான வார்த்தைகளின் தொகுப்பாகப் பார்த்தார்கள். முகம் சுளிக்கவும் செய்தார்கள்.
ஆனால் டங்காமாரி என்பது கெட்ட வார்த்தை அல்ல. நல்ல வார்த்தைதான். அடங்காமாரி என்பதுதான் சற்று மருவி டங்காமாரியாக வந்துவிட்டது என்கிறார் கவிஞர் மகுடேஸ்வரன்.
இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து எழுதியிருப்பதைப் படியுங்கள்:
டங்காமாரி, ஊதாரி' என்று ஒரு பாட்டு தொடங்குகிறது. ஊதாரிக்குப் பொருள் தெரியும். அதென்ன டங்காமாரி ? அடங்காமாரி, அடங்காப்பிடாரி' போன்ற வசவுச் சொற்களைப் பற்பல பகுதிகளில் கேட்கலாம். ‘அடங்காமாரி' என்பதன் சென்னை வழக்குத்தான் ‘டங்காமாரி'. அடங்காமாரியை விரைந்து நாவழுக்கும்படி சொன்னால் ‘டங்காமாரி' என்ற ஒலிப்பை அடையும்.
'அடங்காமாரி நாயி...' என்று வைவார்கள். அடங்காதவன், திமிர் பிடித்தவன், தான்தோன்றி என்பன பொருள்கள். மார்' என்பது பலர்பால் விகுதிகளில் ஒன்று. மாமன்மார், அத்தைமார் என்போம். பெரியோர்களே, தாய்மார்களே...' என்பது வழக்கமான மேடைவிளிப்பு. மார் என்னும் விகுதியின் திரிபே மாரி. அதனால், ‘அடங்காமாரி'தான் டங்காமாரி !
-எப்பூடி!