Don't Miss!
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- News ‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மகா தீபத்தை தரிசித்த இளையராஜா.. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!
சென்னை: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்தார் இசையமைப்பாளர் இளையராஜா.
கார்த்திகை தீபத் திருவிழா தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகமெங்கும் வீடுகளை விளக்குகளால் அலங்கரித்தும் பட்டாசு வெடித்தும் மக்கள் கார்த்திகை தீபத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
செம க்யூட்டா இருக்கீங்க.. அதுல்யா வெளியிட்ட அழகு போட்டோக்கள்.. சொக்கித் தவிக்கும் ரசிகர்கள்!
மகா தீபம்
கார்த்திகை மாதம் என்றாலே தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்த மாதம். அக்னி ஸ்தலமாக இருக்கும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி வழிபடுவதை தொன்று தொட்டு செய்து வருகின்றனர். கொரோனா காலம் என்பதால், வெளி மாவட்ட மக்களுக்கு இம்முறை அனுமதி வழங்கப்படவில்லை.
வீடுகளில் விளக்கேற்றி
தமிழகமெங்கும் வீடுகளை மக்கள் விளக்குகளால் அலங்கரித்து கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடினர். இன்னொரு தீபாவளியாக பட்டாசுகளை வெடித்து, புத்தாடைகளை உடுத்தி ஒளிக் கடவுளை மக்கள் வணங்கி வருகின்றனர். திருவண்ணாமலை செல்ல முடியாத மக்கள் டிவியிலேயே நேரலையில் மகா தீபத்தை கண்டு வழிபட்டனர்.
திருவண்ணாமலையில் இளையராஜா
மகா தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை சென்ற இசையமைப்பாளர் இளையராஜா மகா தீபத்தையும் அண்ணாமலையாரையும் தரிசித்துள்ளார். இளையராஜா திருவண்ணாமலையில் சாமி தரிசனம் மேற்கொண்ட நிலையில், அவரது புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
பக்தி அதிகம்
இளையராஜாவுக்கு இறை நம்பிக்கையில் அதிக ஈடுபாடு உண்டு. ஏகப்பட்ட கடவுள் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். அக்னி லிங்கம் என திருவண்ணாமலைக்கு ஸ்பெஷல் ஆல்பமே போட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்த போதும் திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.