Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கிருஷ்ணமூர்த்தியாகவே வாழ்ந்த மகாநதி கமல்ஹாசன்
Recommended Video
சென்னை : நவம்பர் 7 உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள். கமல்ஹாசன் பல சாதனைகளை செய்த மாபெரும் கலைஞர் .இந்தியா முழுவதும் எல்லோருக்கும் தெரிந்த நடிகர். 6க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார். கமலின் பல சாதனைகளை இன்று வரை இந்தியாவில் இருக்கும் பல நடிகர்களால் நெருங்க கூட முடியவில்லை. களத்தூர் கண்ணம்மா முதல் தற்போது விஸ்வரூபம்2 வரை 226 படங்களில் நடித்திருக்கிறார் .அதில் நாங்கள் முக்கியமான படமாக பார்க்க கூடிய 'மகாநதி' படத்தை ஒரு முறை திரும்பி பாரக்க போகிறோம்.
கண்டிப்பாக நீங்கள் நினைப்பது சரிதான் பல முக்கியமான கமல் படங்கள் இருந்தாலும் உங்கள் நேரத்தை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த படத்தை பற்றி மட்டும் சிலவற்றை பகிர போகிறோம்.
மகாநதி - கமல்ஹாசனின் எழுத்தில் இயக்குனர் சந்தான பாரதி இயகத்தில் உருவான படம் தான் மகாநதி . கிருஷ்ணசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல் . கிருஷ்ணசாமி தனது மனைவியை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் வாழும் ஒரு கணவன் . அவரின் பிள்ளைகள் காவேரி மற்றும் பரணி .திருச்சி அருகே இருக்கும் கிராமத்தில் வாழும் விவசாய குடும்பம் தான் அது . அந்த ஊரில் மிகவும் கௌரமாய் தலைநிமிர்ந்து வாழும் குடும்பம்.
தனுஷ்(கொச்சின் ஹவினாவின்) தூன்டுதலின் பெயரில் சென்னை வரும் குடும்பம் .பின்பு தனுஷ் உடன் கிருஷ்ணசாமி தனது சொத்தை விற்று சிட்பண்ட் துவங்கிறார். உடனிருக்கும் தனுஷ் சிட்பண்டின் பணத்தை ஏமாற்ற மக்களிடம் சிக்கி ஜெயிலுக்கு செல்கிறான் கிருஷ்ணசாமி. அங்கு அவனுக்கு பல இன்னல்கள் நடக்கிறது.
'மகாநதி ஷங்கர்' என்று பிரபலமான ஷங்கர் படத்தில் கொடூரமான ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் செய்யும் இன்னல்களை தாங்க முடியாமல் தவிக்கும் கிருஷ்ணசாமிக்கு ஜெயிலில் பஞ்சாபிகேசன் தான் ஆதரவு. அப்பாவை பாரக்க ஜெயிலுக்கு வரும் பஞ்சாபிகேசன் மகளுக்கும் கிருஷ்ணசாமிக்கும் காதல் உண்டாகிறது .ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார் கிருஷ்ணசாமி . வெளியே வந்த பின் தான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
அவரது அத்தை இறந்து விடுகிறார் . கிருஷ்ணசாமியின் மகனும் மகளும் காணமால் போய் இருக்கின்றனர் . முதலில் மகனை தேடி கண்டு பிடிக்கும் கிருஷ்ணசாமி தனது மகளை தேடும் பணியில் இறங்குகிறார்,அப்போது தான் தனுஷ் காவேரியை கடத்தி கொல்கத்தாவில் உள்ள பாலியல் தொழில் செய்யும் விடுதியில் விற்று விட்டது தெரியவருகிறது . பெண்ணை மீட்டு சென்னை திரும்பும் கிருஷ்ணசாமிக்கு தனது மகள் படும் வேதனையை தாங்கிகொள்ள முடியவில்லை. இதனால் இதற்கு காரணமாய் இருந்த தனுஷையும் தொழிலதிபரையும் கொலை செய்கிறான் கிருஷ்ணசாமி. அதற்கு பிறகு 14 வருட சிறை தண்டனைக்கு முடிந்த பின் மீண்டும் குடும்பத்துடன் இணைந்து ஊருக்கே திரும்பி விடுகிறான் கிருஷ்ணசாமி. தன் மகளை ஜெயிலிலும் வெளியியிலும் தனக்கு உதவிய கான்ஸ்டபிள் முத்துசாமி மகனுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்.
இதில் கிருஷ்ணசாமியாக வாழ்ந்து இருப்பார் கமல் .இந்த படம் தேசிய விருது ,மாநில விருது என விருதுகளை வாங்கி குவித்தது. இந்த படம் கமல்ஹாசனின் படங்களில் மிக முக்கியமான படமாக பாரக்கபடுகிறது . இந்த படத்தின் இறுதியில் வில்லனை கொல்ல முயற்சிக்கும் போது தனது கையையும் சேர்த்து வெட்டி கமல் ஒற்றை கையுடன் நிக்கும் காட்சியை இன்றளவும் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது.
கமல்ஹாசன் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றிருந்தாலும் மீண்டும் அவர் சினிமாவுக்கு வந்து மகாநதி போல் பல படங்களை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகொள்.
அவர் நிச்சயம் மேலும் மேலும் பல அசத்தலான மெய்சிலிர்க்கும் படைப்புக்களை கொடுப்பார். அதனோடு மக்களின் சேவகனாகவும் அரசியலில் ஜொலிப்பர் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களுக்கு என்றுமே உண்டு.