Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சுஷாந்தின் அந்த போட்டோவை அழித்துவிடுங்கள்.. இல்லையெனில் நடவடிக்கை பாயும்.. போலீஸ் வார்னிங்!
சென்னை: சமூக வலைதளங்களில் பரவும் சுஷாந்த் மரணித்திருக்கும் போட்டோவை உடனடியாக டெலிட் செய்யுமாறு மகாராஷ்டிரா போலீஸ் எச்சரித்துள்ளனர்.
பாலிவுட்டின் இளம் நடிகரான சுஷாந்த் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டின் அரையில் சடலமாக அவரது உடல் மீட்கப்பட்டது.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் அவரது மரணம் கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றே அவர் மரணித்திருக்கும் போட்டோ வைரலானது.
ரஜினி பட நடிகை கடற்கரையில் மேல் சாட்டை இல்லாமல் காத்து வாங்கும் போட்டோ வைரலாகி வருகிறது..
கடும் கண்டனம்
கழுத்தில் கயிறுடன் படுக்கையில் சுஷாந்த் அசைவற்று கிடந்தார். பார்க்கும் போதே கலங்க வைக்கும் அந்த போட்டோவை பார்த்த திரைத்துறை பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவத்தனர். இந்த போட்டோவை ஷேர் செய்ய உங்களுக்கு எப்படி மனசு இடம் கொடுக்கிறது என்றும் விளாசினர்.
போலீசார் எச்சரிக்கை
மேலும் இறந்தவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மரியாதை அளிக்கும் வகையில் அவர் மரணித்துக் கிடக்கும் இந்த போட்டோவை ஷேர் செய்வதை தவிருங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அந்த போட்டோ பகிரப்படுவதற்கு போலீசாரும் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
கவலைக்குரியது
இதுதொடர்பாக மகாராஷ்டிரா போலீசார் வரிசையாக டிவிட்டியுள்ளனர். அதில் ஞாயிற்றுக்கிழமை தனது மும்பை வீட்டில் இறந்து கிடந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சில படங்கள் ஆன்லைனில் பரப்பப்படுவது "கவலைக்குரியது மற்றும் மோசமான ரசனை கொண்டது" என்று தெரிவித்துள்ளது.
நீக்கப்பட வேண்டும்
இதுபோன்ற பதிவுகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவை, மேலும் அந்த பதிவுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். மற்றொரு டிவிட்டில் இதுபோன்ற படங்கள் புழக்கத்தில் இருப்பது சட்ட வழிகாட்டுதல்களுக்கும் நீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது என்பது வலியுறுத்தப்படுகிறது, மேலும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக பொறுப்பாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில காவல்துறை
மற்றொரு டிவிட்டில் "மகாராஷ்டிரா சைபர் க்ரைம் மேற்கண்ட படங்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து நெட்டிசன்களையும் அறிவுறுத்துகிறது. ஏற்கனவே பரப்பப்பட்ட படங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.