twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்ணை நாய்போல சித்தரித்த மகேஷ்பாபு.. கண்டித்த சமந்தாவை காய்ச்சி எடுத்த கொடுமை!

    By Shankar
    |

    ஹைதராபாத்: கதாநாயகியை நாய் போல சித்தரித்து போஸ்டர் அடித்த மகேஷ்பாபுவுக்கு கண்டனம் தெரிவித்தார் நடிகை சமந்தா.

    இதற்கு பதில் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு.

    சமீபத்தில் வெளியான மகேஷ்பாபு நடித்த நேனொக்கடய்னே தெலுங்கு படத்துக்கு ஹைசதராபாத் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினர்.

    mahesh babu and samantha

    அதில் கடற்கரையில் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் அவர் பின்னால் கதாநாயகி கை, கால்களை தரையில் ஊன்றி நாய் போல் மண்டியிட்டு செல்வது போலவும் போஸ்டர் அமைந்திருந்தது.

    இதற்கு சமந்தா கண்டனம் தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்துவது போல் இந்த போஸ்டர் உள்ளதாக அவர் கருத்து வெளியிட்டார். இதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் ஆத்திரமுற்றனர். மகேஷ்பாபு கால்களை சமந்தா பிடிப்பது போன்ற அவரது பழைய பட போஸ்டர்களை வெளியிட்டு கண்டித்தனர். சமந்தாவை தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க கூடாது என்றும் எதிர்த்தனர். பிறகு இப்பிரச்சினை அடங்கியது போலத் தெரிந்தது.

    ஆனால் மகேஷ்பாபு தற்போது திடீரென்று சமந்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நேனொக்கடய்னே படம் எதிர்பார்த்த படி நன்றாக ஓடவில்லை. இதற்கு சமந்தாவின் விமர்சனம்தான் காரணம் எனக் கருதி, அவரை காய்ச்சி எடுத்துள்ளார்.

    இதுகுறித்து மகேஷ்பாபு கூறுகையில், "சமந்தாவுக்கு என்னையும் எனது மனைவியையும் நன்றாகத் தெரியும். பட போஸ்டரில் அவருக்கு மன உறுத்தல் ஏற்பட்டு இருந்தால் என்னிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கலாம். மாறாக இன்டர்நெட்டில் கருத்தை வெளியிட்டு இருக்க வேண்டாம். அவரது கருத்து பெண்களை திசை திருப்பிவிட்டது, படத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது," என்றார்.

    English summary
    Mahesh Babu condemned actress Samantha for her comments on Nenokkade posters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X