Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம்... வரித்துறை மீது நடிகர் மகேஷ்பாபு குற்றச்சாட்டு!
சென்னை : முன்னறிவிப்பு செய்யாமலேயே தனது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டதாக நடிகர் மகேஷ்பாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவரது வங்கி கணக்குகளை வரித்துறையினர் நேற்று முடக்கினர். இதற்கு அவர்கள் கூறிய காரணம், கடந்த 2007-08ம் ஆண்டுகளில் நடிகர் மகேஷ்பாபு தூதுவராக இருந்து விளம்பரங்களில் நடித்ததற்கு சேவை வரி கட்டவில்லை என்பது தான். அதாவது, சேவை வரி ரூ.18.5 லட்சம் செலுத்தவில்லை என்று ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி ஆணையகம் தெரிவித்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்து நடிகர் மகேஷ்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜி.எஸ்.டி ஆணையகம் அறிக்கையின்படி கடந்த 2007-08ம் ஆண்டில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கான வரியைக் கட்டவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.
அப்போதைய கால கட்டத்தில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கு வரி விதிக்கப்படவில்லை. 2010ம் ஆண்டில்தான் அந்த சேவைக்கு வரி விதிக்கப் பட்டது. வரி கட்டுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, வங்கிக் கணக்கு முடக்கம் தொடர்பான பல்வேறு விதிமுறைகள் வரி செலுத்துவோருக்கு ஆதரவாக இருக்கிறது.
ஆனால் ஜி.எஸ்.டி ஆணையகம் எந்த முன் அறிவிப்பும் இன்றி எனது வங்கிக் கணக்கை முடக்கி இருக்கிறது'' என அவர் கூறியுள்ளார்.